| மால்கொண்ட தலைவி கூற்று | 170 175 180 | பின்னழகு முன்னழகாம் பேரழகைக் காணுமுன்னே முன்னழகைக் கண்டேனான் மோகித்தேன்-பின்னழகு தானேகண் டாலுந் தனக்குத் துயர்வருமென் றேனோரை நோக்கி யெழுந்தருள-ஆனோன் விமலத் திருமுகமு மென்மார்பின் மேவும் கமலத் திருமுகமுங் கண்டேன்-அமலன் அரவணையா னென்பதுமுண் டண்ணல்அரன் போல இரவணையா னென்பதுமுண் டேனும்-பரவைத் திருவணையா னென்றுதினஞ் செப்புவது பொய்யென் உருவணையு மாதர்க் குரைத்தேன்-மருவணையும் செங்கரத்தில் அன்று திருடியவெண் ணெய்போலச் சங்கிருக்க என்சங்கு தான்கொண்டீர்-கொங்கை மலையருவி நீருமக்கு மாலிருஞ் சோலைத் தலையருவி நீர்தானே சாற்றீர்-விலையிலாப் பொற்கலை ஒன்றிருந்தாற் போதாதோ அன்றுபுனை வற்கலையி லேவெறுப்பு வந்ததோ-நற்கலைதான் ஆரஞ்சேர் கொங்கைக் களித்த தறியீரோ சோரந் திரும்பத் தொடுத்தீரோ-ஈரஞ்சேர் நூலாடை யாமெங்கள் நுண்ணாடை தாமுமக்குப் பாலாடை யாமோ பகருவீர்-மாலாகி மொய்த்திரையும் எங்கள் மொழிகேளீர் பாற்கடலில் நித்திரைதான் வேகவதி நீரிலுண்டோ-இத்தரையிற் பொங்குநிலா வெள்ளம் பொருந்திற்றோ பாற்கடல்தான் அங்குநிலா தும்மோ டணைந்ததோ-கங்குலெனும் ஆனை கெசேந்திரன் ஆகிலதன் மேல்வருவன் மீனையும் விட்டு விடலாமோ-கானச் சதிரிள மாதர் தமக்கிரங்கு வீர்நெஞ் சதிரிளமா தர்க்கிரங்கொ ணாதோ-முதிர்கன்றைக் கொட்டத்து வெண்பால் குனிந்துகறப் பார்முலையில் | | |
|
|