பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
206

 
ஏர் - அழகு. ஏய்தல் .ஒத்தல். வண்ணம் - அழகு.  கார் - கருமை.  பீர் - பீர்க்கு.
அலர் - பூங்காவி,   கருங்குவளை.   வார் - கயிறு. கழல் - வீரத்தால்   வீரதாகக்
காலிற்கட்டுவதோர்  ஆபரண   விசேடம். கருங்குவளை போன்ற கண், அழுதழுது
சிவந்து நீர்   கோத்த வதனால், நீர் முகந்த செங்கழுநீர் போன்றது என்று கூறினார்.

`வினவிய   செவிலிக்கு  மறைத்தமை விளம்பல்` முதலாகப் `பிறர்வரை வுணர்த்தல்`
ஈறாகக்  கூறிய ஐந்தும் பொய்த்தற்குரியன. `குறிபெயர்த்திடுதல்` முதலாகப் `பகலினு
மிரவினும் அகலிவ ணென்றல்` ஈறாகக் கூறிய ஐந்தும் மறுத்தற் குரியன. `உரவோன்
நாடும்  ஊரும் குலனும் மரபும் புகழும் வாய்மையும் கூறல்` ஒன்றுங்  கழறற்குரித்து.
`வரைவெதிர்   வுணர்த்த`லும்,   `வரையுநா ளுணர்த்த`லும்,  `அறிவறி வுறுத்த`லும்,
`ஆறுபார்த்துற்ற   வச்சங்கூற`லும்,   ஆற்றாந்தன்மை   யாற்றக்கூற`லும்,   `காவன்
மிகவுரைத்த`லும்,         `காமமிக வுரைத்த`லும்,         `கனவு நலிபுரைத்த`லும்
`கவினழிபுரைத்த`லும்  ஆகிய  உஒன்பதும்  மெய்த்தற்குரியன.   இவை  எல்லாங்
குறிப்பினானும் ததவெளிப்படையானும் வரைவு கடாவியவாறு உணர்க.
(247)    
வரைவுகடாதல் முற்றிற்று.