பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
208

 
நகையையுமுடைய   பொன்னையொப்பாளை   மறந்து   அவ்விடத்தி  லிருக்கவும்
வல்லையாதலால்,   பறந்தாற்போற்   செல்லும்  பரிபூண்ட  தேரைச்   செலுத்தாது
ஒழிவாயாக என்றவாறு.

    ஆங்கு: உவமவுருபு.    இவர்தல் - செலுத்தல்.     கடவுதல் - செலுத்துதல்.
ஆங்கு - அவ்விடம். அமைதல் - அமைந்திருத்தல்.   நிறம் - மார்பு. இவர்தல் - ஏறுதல். வாள் - ஒளி. பொன் : ஆகுபெயர்.
(249)    
தலைவனீங்கல் வேண்டல்:
    தலைவன்  நீங்கல் வேண்டல் என்பது, தலைவன் பாங்கியுடன்
படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறல்.


 அறையும் பொறையு மணந்தவெங் கானத் தணங்கையில்வைத்
திறையும் பிரிவதற் கெண்ணகி லேனெண்ண லார்வரைமேல்
மறையும் படிவென்ற சந்திர வாணன்தென் மாறையில்வண்
டுறையுங் குழலிசென் றேவரல் வேண்டுமெம் மூரகத்தே.

   (இ-ள்.) பகைவர்   மலைமேல்   மறைந்தொழயும்படி வென்ற   சந்திரவாணன்
தென்மாறை  நாட்டிலிருக்கின்ற  வண்டுறையுங் குழலி!   அணங்கை
  இல்லிடத்து
வைத்து, அறையும்   பொறையுங்
 கூடிய வெவ்விய காட்டகத்து  இறைப்பொழுதும்
பிரிவதற்   கெண்ணுகிலேன்;  எண்ணிய   தென்னெனில்
 ஒரு   காரியத்தால் எம்
ஊரகத்துப் போய் வரல் வேண்டும் என்றவாறு.


    அறை - கற்குகை.   பொறை - துறுதல்.    மணத்தல் - கூடுதல்.    இறை:
ஆகுபெயர்.    எண்ணலார் - பகைவர்.   வரை - மலை. மலர் மணங்கொள்ளுங்
காரணத்தால் வண்டுறைவதெனக் கொள்க.
(250)    
தலைவனைப் பாங்கி விடுத்தல்:
     தலைவனைப்  பாங்கி  விடுத்தல்  என்பது,  பாங்கி  தலைவனை ஊர்க்குப்
போய்வருகவென விடுத்தல்.

 இல்லத் துறையு மிவள்பொருட் டானுமக் கியானுமொன்று
சொல்லத் தவிர்கிலன் சூழ்கழ லீர்சடர் தோய்புரிசை
வல்லத் தமர்வென்ற வாணன்தென் மாறையில் வந்துவந்து
செல்லத் திருவுளம் வைத்தகல் வீர்நுந் திருநகர்க்கே.

    (இ-ள்.) அணிந்த   கழலையுடையீர்!   இல்லிலிருக்கும் இவள் பொருட்டால்
நுமக்கு  யானும்  ஒரு  சொற்சொல்லத்  தவிராது  சொல்ல  வேண்டிய தாதலாற்
சொல்கின்றேன்;  கதிரோனைத்  தூண்டும்   மதில்   சூழ்ந்த   வல்ல  மென்னும்