பக்கம் எண் :

கட
229
இரண்டாவது

 
வரைவியல்

     வரைவு என்பது,   தலைமகன்   தலைமகளைக்   குரவர்   முதலாயினோர்
கொடுப்பவும் கொடாதொழியவும் வதுவைச் சடங்கொடு  பொருந்தி  மணஞ்செய்து
கோடல்.

     ஆதியில் எடுத்துக் கோடற்கண்ணே களவு என்றும் கற்பு என்றும் கைகோள்
இரண்டென வைத்து,  அவ்விரண்டுக்கும் நடுவே  வரைவியல் என்று கூறியதனால்
முன்னதனோடு    மாறுகொள்ளுமெனின்  மாறுகொள்ளாது;  என்னை,   கற்பிற்கு
நிமித்தமாய வரைவு  கூறுதலான்  இதுவும்  கற்பின்பாற்படும்.  ஆயின்  இதனைக்
கற்பின் பாற்படுத்துக் கூறாது, வரைவியல் என வேறாகக் கூறியது என்னையெனின்,
வரைவு  மலிவு  முதலாக  உடன்   போக்கிடையீடு   ஈறாகப்   பலவகைப்பட்டு,
ஒவ்வொரு  வகைக்குக்   கிளவிகளும்   பலவாக   அதிகாரப்பட்டு   நடத்தலின்,
விளங்குதற்கு, வரைவியல் என வேறு கூறப்படும். என்னை, புணர்தலும்  புணர்தல் நிமித்தமும்   குறிஞ்சி    யாயினவாறுபோல,    இல்வாழ்க்கையும்  இல்வாழ்க்கை
நிமித்தமும் ஆயவரைவும் கற்பெனப்படுமென்று உணர்க.

  1`வரைவு மலிவே யறத்தொடு நிலையென்
றுரையமை யிரண்டும் வரைவிற் குரிய
கிளவித் தொகையெனக் கிளந்தனர் புலவர்`

என்னுஞ்  சூத்திரவிதியால்,  வரைவுமலிவும்   அறத்தொடு நிலையும் என வரைவு
இரண்டு வகைப்படும்.


1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 2.