தருவின் பக்கத்தில் ஒரு பசும்பொற்கொடி, புயலைத் தாங்கிப் பிறையைத்தரித்துப் போர் செய்யும் வில்லுடன் கெண்டைமீன் பொருந்திய தாமரை மலர்ந்து என் கண்ணெதிரே நின்றது என்றவாறு - இது பொழிப்புத் திரட்டல்.
|
(விரிவுரை) `புயலைச்சுமந்து பிறையையணிந்து பொருவிலுடன் கயலேமணந்த கமலமலர்ந்து` என்னும் வினையெச்ச அடுக்குகள், `நின்றது` என்னும் அஃறிணை முற்றுவினை கொண்டு முடிந்தன. புயலைப் பிறையைக் கமலத்தை என்னும் இரண்டாமுருபு தொக்கு நின்றன. ஏகாரம் அனைத்தும் ஈற்றசை. `வயல் பொய்கை` என்புழி எண்ணும்மை தொக்கு நின்றது. புவியின் கண் கற்பகத்தருவைக் கூறினது குற்றமெனின், குற்றமன்று. என்னை, தேவரெல்லாரும் பொதியமலையிற் கூடியிருத்தலின் அம்மலைக்குப் பொதுஇல் என்னும் பெயர், இக்காலத்துப் பொதியில் எனத் திரிந்து மரூஉவாய் நின்றது; ஆதலால், தேவரிருக்குமிடத்துக கற்பகத்தரு இருக்குமென்பது துணிபு. அன்றியும், குறுமுனியிருக்கும் மலையாதலானுங் கூறப்படும். கற்பகத்தின் அயலில் நிற்பது காமவல்லிக்கொடி யாதலான், பசும்பொற்கொடி காமவல்லிக்கொடி யென்றுணர்க.
|
இக்கவி கட்டளைக்கலித்துறை என்றுணர்க. திலதக்கலித்துறை, கோவைக்கலித்துஐற யெனினும் அமையும். இதற்கு விதி. `நேர்பதி னாறே` என்னுங் கட்டளைக் கலித்துறைச் சூத்திர அடியிற் கண்டுகொள்க. ஆயின், `யானுந் தோழியும்`. என்பதும் 1 `வென்றான் வினையின்` என்பதும், கலித்துறையன்றோ வெனிற் கூறுதும்:
|
| 2`மூவா முதலா வுலகமொரு மூன்று மேத்தத் தாவாத இன்பந் தலையாயது தன்னி னெய்தி ஓவாது நின்றகுணத் தொண்ணிதிச் செல்வ னென்ப தேவாதி தேவ னவன்சேவடி சேர்தும் அன்றே`
|
என்னும் சிந்தாமணிப் பதிகச் செய்யுளில் இதற்குப் பெயர். விருத்தத் தோசையாய் விருத்தத்திலக்கணம் நிரம்பாமையானும், நெடிலடி நான்காய்க் கலித்துறை யோசையிலக்கணம் நிரம்பாமையானும், விருத்தக்கலித்துறை யென்று நச்சினார்க்கினியர் கூறிய உரையான் உணர்க. - இஃது அகலங்கூறல்.
|
இதனில் அகப்பாட்டு றுப்பு வருமாறு: |
| 3`திணையே கைகோள் கூற்றே கேட்போர் இடனே காலம் பயனே முன்னம்
|
|
1. சூளாமணி-காப்பு. 2.சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - 1. 3.அகப்பொருள் விளக்கம். ஒழிபியல் - சூ. 2.
|