|
(இ-ள்.) மண்ணிலே மிகுந்த புகழையுடைய தஞ்சைவாணன் பொதிய வெற்பிடத்துப் பெண்மையிற் சிறந்த இப்பேதையினது பார்வை பெரிய தீவினையேன் எண்ணத்தின்மிகுந்த பெரிய வேட்கைநோய் தனக்கு வருத்தப்பாடு செய்யாது இன்பஞ் செய்யும் மருந்துமாகி, கண்போற்சிறந்த உறுப்பில்லையாவதும ் காட்டியது.
|
துயர்: ஆகுபெயர். வேட்கையை நோயாக்கலால் பார்வையை மருந்தாக உருவகம் செய்யப்பட்டது. அவயவம் பலவற்றினானும் பயன்தருவ தின்மையாய்க் கண் பயன்தருவதாய்ச் சிறத்தலின், `கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை யாவதுங் காட்டியது` என்று கூறியது.
|
காட்சி முதல் குறிப்பறிதல் ஈறாக நான்கும் கைக்கிளையென்று கூறப்படுதலின், கைக்கிளையுள் தலைவி வேட்கைக் குறிப்பினையறிந்தான் என்புழி, கைக்கிளை யென்பதனோடு மாறு கொள்ளும்; மற்றென்னை யெனின், மாறுகொள்ளாது; என்னை,
|
தலைமகள் பார்வை பொதுப்பார்வையே. இவன் தன் அவா மிகுதியால் பார்வையில் வேட்கையுளதென்று கருதினானென்பதாயின்,தலைவன் அறிவிலனாம்; மற்றென்னை யெனின்,தலைமகள் வேட்கைக் குறிப்பால பார்த்தாள் என்புழிப் புணர்ச்சிக்கு உடன்பட்டாளாயிற்று; உடன்பட்டாள் எனவே தொல்லாசிரியர் கைக்கிளையிற் கூறார்.
|
1மெய்ப்பாட்டியலில் தலைவிக்குக் கூறிய அவத்தையில், |
| `புகுமுகம் புரிதல் பொறிநுதல வியர்த்தல் நகுநய மறைத்தல் சிதைவு பிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே ஒன்றென மொழிப` |
- (முதல் அவத்தை) |
| `கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ டூழி நான்கே இரண்டென மொழிப` |
- (இரண்டாம் அவத்தை) |
| `அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் இல்வலி யுறுத்தல் இருகையும் எடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப` |
- (மூன்றாம் அவத்தை) |
| `பாராட் டெடுத்தல் மடந்தப வுரைத்தல் ஈரமில் கூற்றம் ஏற்றவர் நாணல் கொடுப்பவை கோடல் உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப` |
- (நான்காம் அவத்தை) |
|
1. தொல். பொருள். மெய் - 13, 14, 15, 16.
|