|
|
அவ்வன்னமிருக்கும் உயிர் கமலமாகவும் உருவகஞ் செய்யப்பட்டன. `மீண்டு வந்து` என்பதனால், போய் என்ற சொல் வருவிக்கப்பட்டது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து இடந்தலைப் பாட்டில் வந்தமையால் போய் மீண்டும் வந்தெனக் கூறியது.
|
அயில் - கூர்மை. விழி - கண். `வாவி` என்புழி ஏழனுருபு தொக்கது. கயல் -மீன். `கயல்போல்விழி` என்னாது, `விழிபோற் கயல்` என்றது.
|
| `பொருளது புணர்வே புணர்ப்போன் குறிப்பின் மருளற வரூஉ மரபிற் றென்ப`
|
என்னும் உவமவியற் சூத்திரத்தான் இன்னது பொருளென்றும், இன்னது உவமையென்றுங் கூறத்தக்கதில்லை. பொருளும் உவமமும் புணர்க்கும் புலவனால் எவ்வாறு செய்யப்பட்டதோ அவ்வாறு இயையுமென்று கொள்க. இதனை இயலுடை யார் விபரீத வுவமையென்ப உகளுதல் - பிறழ்தல், `அலர்த்தேன் குதிக்க வாவிக் கயலுகளும்` என்று பாடமோதுவாரும் உளர். வரை - மலை. உடன்கூவுதல் - எதிர் கூவுதல். குடைதல் - குளித்தல். குயிலாயம் : உவமைத்தொகை. குறுகல் - கூடுதல். |
`தந்ததெய்வந் தருமெனச் சேறல்` ஒன்றும் தெய்வந் தெளிதற்குரித்து; `காண்டல்`, `முயங்கல்`, `புகழ்தல்`, மூன்றும் கூடற்குரிய; `ஆயத்துய்த்தல்` ஒன்றும் விடுத்தற்குரித்து.
|
(38) |
இடந்தலைப்பாடு முற்றிற்று. |
இரண்டாநாள் இடந்தலைப்பாட்டிற் கூடினாரென் றுணர்க.
|
|
|