பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
84

 
      இடையாராகிய  ஆயக்கூட்டத்துடன்  நீ போய்ப் பொருந்துக, என மாலை
சூட்டித் தலைவியை விடுத்தான் என்றவாறு.

      இளங்கொடி:  ஆகுபெயர். `குழாந் தன்னூடேய்ந்து செல்லும்` என  மாறுக.
இப்பி ஆயிரம் சூழ்ந்தது இடம்புரி; இடம்புரி ஆயிரஞ்சூழ்ந்தது வலம்புரி, வலம்புரி
ஆயிரம் சூழ்ந்தது  சலஞ்சலம்.  புகழ்மணி - மாணிக்கம்.  சலஞ்சலம்   சங்குகளிற்
சிறத்தலானும்,   மாணிக்கம்   மணிகளிற்  சிறத்தலானும்  உவமை   கூறியதென்று
உணர்க. புடை - பக்கம். ஊடல் - பிணக்கம். மேவுதல் - பொருந்தல்.

      இக்கிளவியில்  மாலைசூட்டித்  தலைவியை  விடுத்தானென்பது;   ஆயின்
இச்செய்யுளில்  முல்லைமாலை   சூட்டி விடுத்தானென்பது     இல்லையாலெனின்,
தலைவி ஆயக்கூட்டத்திற்   சார்ந்தவுடன்   தலைவியை   நோக்கி,     `நினக்கு
முல்லைமாலை சுனைப்புனம் சூட்டியவாறு நன்றால்` என்று பாங்கி  கூறியவதனான்
இங்ஙனங் கூறப்பட்டது. வரைவியலில் தலைவனைப் பாங்கி வாழ்த்தற்  செய்யுளில்,


1`சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே`

      என்றதனாலும் அறிக.
இவற்றுள் முன்னைய மூன்றும் சார்தல், கேட்டல், சாற்றல் என்னும்  மூன்றற்குரிய;
`பாங்கன் கழறல்` முதல்   `கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்`  ஈறாகக்
கூறிய நான்கும் எதிர்மறைக்குரிய; `பாங்கன் தன் மனத்தழுங்கல்` முதல், `தலைவன்
தனக்குத்   தலைவி  நிலைகூறல்`  முதல்,  `புகழ்தல்`  ஈறாகக்  கூறிய  நான்கும்
கூடற்குரிய;   தலைவன்   தலைவியைப்   பாங்கியொடு  வருகெனப்  பகர்த`லும்
`தலைவன் தலைவியைப் பாங்கிற்கூட்ட`லும் ஆகிய இரண்டும் பாங்கிற்கூட்டற்கரிய
எனக்கொள்க.
(62)    
பாங்கற்கூட்டம் முற்றிற்று.

1. தஞ்சைவாணன் கோவை - 285.