பக்கம் எண் :

பாங்கி மதியுடன்பாடு
87

 
தோற்றத்தாலாராய்தல்:
      திளைத்தல் - நிறைதல்.   திரை:   ஆகுபெயர்.    செம்பொன் வெற்பு -
மேருமலை.    பிரான் - சிவன்.     முடி - சடைமுடி.    வைகுதல் - தங்குதல்.
செக்கர்விண் - செவ்வானம்.     கார் - கருநிறம்  :   மேகமெனினும் அமையும்.
தளைத்தல் - தடைசெய்தல்.

திரு இவ்வுருக்கொண்டு   வந்து   பிறந்தாள் என்னும் கருத்தால் `திருவே`  என்று
கூறியது. இவள் கற்புக்கடன் பூண்டவளாதலான்,

 1`தெய்வந் தொழஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை`

      என்னும்    விதியினான்   தொழளாயினாள்;   ஆகவே  ஒழுக்கத்தினால்
ஐயந்திருந்தவாறாயிற்று.

இப்பால்  பாங்கி  தலைவியை  நோக்கிக், `கண்சிவந்தும்  இதழ்வெளுத்தும் நுதல்
குறுவெயர்  வரும்பியும்  இருத்தலால்,   இவ்வேறுபாடு  நினக்கெற்றறினாலாயது?`
என்று வினாவுதலும், தலைவி `சுனையாடிப் போந்தேன், அதனால் வந்தது`  என்று
விடுத்தலும்   இச்செய்யுளில்   கவி  கூறிற்றிலர்; யாதினாலெனின்,  அகப்பொருட்
சூத்திரத்தில்  இவ்விரண்டிற்குங்   கிளவி   கூறிற்றிலராதலானென்க. அவர் கிளவி
கூறாததற்குக்   காரணம்   என்னை   யெனின்,   சுருக்க  நூலாதலிற் கூறிற்றிலர்.
விரிநூலிற்   கூறியதுண்டோவெனின்,   கூறியதுண்டு, என்னை, தொல்காப்பியத்தில்
2`நாற்றமுந்   தோற்றமும்`   என்னுஞ்   சூத்திரத்தில்   நச்சினார்க்கினியருரையில்
தலைவி வேறுபாடு பாங்கி வினாயதற்குச் செய்யுள்,


`தொய்யில் வனமுலையுந் தோளுங் கவினெய்தித்
தெய்வங் கமழுமால் ஐம்பாலு - மையுறுவல்
பொன்னங் கொடிமருங்குற் பூங்கயற் கண்ணினாய்க்
கென்னை யிதுவந்த வாறு.`

      இதற்கு விடை: நின்னை   நீங்கி   மேதக்க  சுனை கண்டு  நெடுங்காலம்
ஆடினேன், அதனான் ஆயிற்று என்னும்.
(64)    
அதற்குப் பாங்கி மெய்யினாற் பல்வேறு கவர்பொருள்
 சொல்லி நாடலின் சுனை நயப் புரைத்தல்:
சுனை   நயப்பு   உரைத்தல்  என்பது, மெய்யாயினது கூறி அக்கூறும் பொருளிற்
பல்வேறு கவர்பொருள் சொல்லி ஆராய்தலின் சுனைநன்மையைக் கூறல்.


1. குறள். வாழ்க்கைத்துணைநலம் - 5.
2. தொல். பொருள். களவியல் - 23.