|
|
| 1`அளவி லின்பத் தைந்திணை மருங்கிற் களவுகற் பெனவிரு கைகோள் வழங்கும்`
|
என்னும் அகப்பொருளினும், 2`அன்பிணைந்திணைக் களவெனப் படுவது` என்னும் இறையனார் அகப்பொருளினும்,
|
| 3`இன்பமும் பொருளும் அறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணைமருங்கிற் காமக்கூட்டம்` |
என்பதனான் தொல்காப்பியத்தினும், மற்றும் பிற நூல்களினும் 4ஐந்திணை களவென்று கூறுவதல்லது பொருந்திணையை அகப்பொருளிற் கூறுவது ஒரு நூலினுமில்லை. |
பெருந்திணையாவது,
|
| ஒப்பில் கூட்டமு மூத்தோர் முயக்கமும் செப்பிய வகப்பொருட் சிதைவும் பெருந்திணை`
|
என்னும் சூத்திர விதியாற் பெருந்திணைப்பாற்படும் என்றல் பொருந்தாது.அகத்திற் சிதைந்தது புறத்தின் பாற்படும்.
|
| 5`மடலே றுதலொடு விடைதழா லென்றா குற்றிசை தன்னொடு குறுங்கலி யென்றா சுரநடை தன்னொடு முதுபாலை யென்றா தாபத நிலையொடு தபுதார நிலையெனப் புகன்றவை 6யியற்பெயர் பொருந்தா வாயின் அகன்ற வகப்புறப்7பெருந்திணைத் தாகும்` |
என்பதனால் நாணநாட்டம் நடுங்கநாட்டம் இதனோடு ஒப்பதன்றீ வழுவமைதிs யென்று உணர்க.
|
இவற்றுள் முன்னைய இரண்டும் மெய்யினாற் சொல்லியது பின்னைய இரண்டும் பொய்யினாற் சொல்லியது. |
(68) |
இத்துணையும் மூன்றாநாட் செய்தியென வுணர்க.
|
முன்னுறவுணர்தல் முற்றிற்று. |
|
1. அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - 26. 2. இறையனார் அகப்பொருள் - 1. 3. தொல். பொருள் களவியல் - 1. (பாடம்.) 4. ஐந்திணைக் களவென்று. 5. அகப்பொருள் விளக்கம், ஒழிபியல் - 35. (பாடம்.) 6. இறைவற் பொருந்தாவாதலின். " 7. பெருந்திணைக்காகும். |