பக்கம் எண் :

வடம

10

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

வடமலையாகிய மேருவில்.  குருகுல மரபினர் கதை-கவுரவபாண்டவர்களின்
கதையாகிய பாரதம்.  “வாடாத தவவாய்மை முனிராசன் மாபாரதம் சொன்ன
நாள், ஏடாக வடமேரு வெற்பாக வெங்கூர் எழுத்தாணி தன்.  கோடாக
எழுதும் பிரான்” என்ற வில்லிபாரதச் செய்யுளால் அறிக.  புடை-பக்கம்.
மருப்பு-கொம்பு.  கடுநுகர்-நஞ்சுண்ட, விரகு-நுட்பம்.  பொருவரும்-ஒப்பற்ற. 
புளகிதம்-மயிர்ச்சிலிர்ப்பு, மகிழ்ச்சி.  புலவி-ஊடல், பிணக்கம், குலம்-கூட்டம்,
இளம்.  துகள்பட-பொடியாக.  நடம்-நடனம், கூத்து.  மழுப்பனை-இங்கித
நயம் பேசுபவனை.  மயக்கனை-மயக்கமுடையவனை.  நித்தல்-தினம்; நித்தம்
என்பதன் போலி.

(4)

கலைமகள்

    அவனி பருகிய மால்திரு உந்தியில்
அமரு மொருபிர மாவெனும் அந்தணன்
அரிய சதுமறை நாவிலி ருந்தவள்
அளவில் பலகலை யோதியு ணர்தவள்
தவள முளரியில் வாழ்வுபு ரிந்தவள்

தவள மணிவட மாலைபு னைந்தவள்
தவள வடிவுள வாணிசு மங்கலி

தனது பரிபுர பாதம் இறைஞ்சுதும்
உவரி முதுதிடர் பாயவி டம்பொதி
உரகன் மணிமுடி தூள்பட மந்தரம்
உலைய எறிசுழல் மாருதம் எங்கணும்
உதறு சிறைமயில் வாகனன் இன்புறு
கவரில் வரிவளை சூல்கொடு தங்கிய
கமட முதுகினில் ஏறநெ டுந்திரை
கதறு கடலலை வாய்முரு கன்பெறு
கருணை தருகவி மாலைவி ளங்கவே.