பக்கம் எண் :

New Page 1

8

திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்

(அ-ரை) சந்ததம்-எப்பொழுதும். பரசடையநம்பர்-மழுவைக் கொண்ட
சிவபெருமான்.  ஆதரம்-விருப்பம் அனுபூதி-உண்மை, அனுபவம்.  உரக
பணபந்தி-பாம்பின் படவரிசை.  அகளம்-கள்ளமின்மை.  அபினம்-பின்ன
மில்லாத.  கங்கணி-கங்கணத்தையுடையவள். மறலி-இமயன்.  பூரணி -
நிறைந்தவள்.  வித்து-முளை.  கொந்தளம்-கூந்தல்.  மவுலி-முடி, கிரீடம்.
வாலை-இளம்பெண்.  இறும்-ஒடியும் மருங்க இரங்க-இடைவருந்த. 
கோமளம்-அழகு.  புரை-ஒத்த.  நிற்குதும்-நிற்போம். பகிர்அண்டம்
புறக்கோளம்.  அசபை - வெளிப்படாமல் உள்ளே செபித்தல்.  உடு-
ட்சத்திரம். மனோகரம்-மகிழ்ச்சி. தரியலர்-பகைவர்.  நிசிசரர்-இரவில்
இயங்குவார்.  வெம் பறந்தலை - கொடிய போர்க்களம். இந்திரை-இலக்குமி.
சயிலம்-மலை.  மோகனம்-புணர்ச்சி.  தோடு-இதழ். முகை-மொட்டு. 
விண்டு-விரிந்து.  தருணம்-புதுமை, இளமை.  கோட்டகம்-இமயமலை. 
சமரமோ கனவேலன்-போர் விரும்பும் முருகன்.  சரவணம்-இமயமலை
அடிவாரத் தடாகம்.  நாணற்புல் அடர்ந்த பொய்கை.  ஆகுபெயர்.

(3) 

பிள்ளையார்

    கருணையின் வழிபடு முதியவள் தனையுயர்
கயிலையி னொருமுறை உய்த்த விதத்தினர்
கனவட கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்
கலைமதி யினைஇரு பிளவுசெய் தொருபுடை
கதிரெழ நிறுவிய ஒற்றை மருப்பினர்
கடுநுகர் பரமனை வலமுறை கொடுநிறை
கனிகவர் விரகுள புத்தி மிகுத்தவர்