(பொ-நி) முலைமேல், செவ்வாய் வைத்த, பவளவடம் பனைவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) வடம்-மாலை. முகிழ்-தாமரைமொட்டு. முயங்குதல்-புணர்தல். கொழுநர் - கணவர். மணி-அழகிய. வைத்த பவளம்-பதித்த பவளம் போன்ற பற்குறி. வடம்-மாலை போன்ற ஒழுங்கு வரிசை, பவளமாலை போன்றது கொழுநர் செய்தபற்குறி வரிசை என்க. (10) குலோத்துங்கன்பால் கொண்ட மையல்கூறி விளித்தது 31. | தண்கொடை மானதன் மார்புதோய் | | தாதகி மாலையின் மேல்விழும் கண்கொடு போம்வழி தேடுவீர் கனகநெ டுங்கடை திறமினோ. | (பொ-நி) மானதன் தாதகி மாலையின் மேல் விழும் கண்கொடு வழி தேடுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கொடை - கொடுத்தல். மானதன்- குலோத்துங்கன் தாதகி - ஆத்தி. கொடு(இடைக்குறை)-கொண்டு. போம்வழி-தாம் போம் வழி. கண் மாலைமீதே பதிந்து மயக்கத்தை விளைத்துவிட்டமையின், தாம்போம் வழி எதுவென்றும் தேடவேண்டியதாயிற்றென்க. கனகம்-பொன். நெடுங்கடை- நீண்ட வாசல். (11) இதுவும் அது 32. | அஞ்சியே கயல்கெடக் கூடலிற் பொருதுசென்று | | அணிகடைக் குழையிலே விழஅடர்த் தெறிதலால் வஞ்சிமா னதன்விடும் படையினிற் கொடியகண் மடநலீர் இடுமணிக் கடைதிறந் திடுமினோ. | (பொ-நி) கயல்கெட, கடலிற்பொருது, சென்று, குழையிலே விழ அடர்த்து எறிதலால், வஞ்சிமானதன் படையினிற் கொடியகண் மடநலீர் திறந்திடுமின்; (எ-று.) (வி-ம்.) கயல்-கெண்டைமீன்; மீனக்கொடி. கூடல்-இருகண் கூடுமிடம்; மதுரை பொருது-மோதி; போர்செய்து. குழை-காதணி, காடு. விழ- கண்விழ; பாண்டியர் விழ. |