பக்கம் எண் :

152கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  மீனவர்  ஐவரும்   தண்டினின்  கெட்ட  கேட்டினை,  நீ
கேட்டிலை போலும்.: (எ-று.)

     (வி-ம்.) விட்ட-ஏவிய.  தண்டு - சேனை.  மீனவர் -பாண்டியர். ஐவர்-
ஐந்துநாடமைத்து ஆண்டபாண்டி வேந்தர். கெட்டகேடு-அழிந்த அழிவு.   (70)

இதுவும் அது

382.போரின் மேற்றண் டெடுக்கப் புறக்கிடும்
 சேரர் வார்த்தை செவிப்பட்ட தில்லையோ.

     (பொ-நி.)     தண்டெடுக்கப்   புறக்கிடும்    சேரர்    வார்த்தை
செவிப்பட்டதில்லையோ? (எ-று.)

     (வி-ம்.) புறக்கிடல்  - முதுகிடல். சேரர்வார்த்தை - சேரமன்னர்களின்
செய்தி, செவிப்பட்டது - காதிற் கேட்டது.                         (71)

இதுவும் அது

383.வேலை கொண்டு விழிஞ மழித்ததும்
 சாலை கொண்டதுந் தண்டுகொண் டேயன்றோ.

     (பொ-நி.) விழிஞம் அழித்ததும், சாலை கொண்டதும் தண்டுகொண்டே
அன்றோ? (எ-று.)

     (வி-ம்.) வேலை-கடல். சாலை-காந்தளூர்ச்சாலை.           (72)

இதுவும் அது

384.மாறு பட்டெழு தண்டெழ வத்தவர்
 ஏறு பட்டது மிம்முறை யேயன்றோ.

     (பொ-நி.) தண்டு எழ, வத்தவர் ஏறு பட்டதும், இம்முறையே யன்றோ?
(எ-று.)

     (வி-ம்.)  மாறுபட்டு -  பகைமைகொண்டு.  தண்டு - (குலோத்துங்கன்)
சேனை. வத்தவர் - வத்தவ  நாட்டவர்.  ஏறு  -  அரசன்;  வத்தவ  நாட்டு  மன்னனாகிய தாராவர்ஷன். இம்முறை-இவ்வாறு.                    (73)

இதுவும் அது

385.தளத்தொ டும்பொரு தண்டெழப் பண்டொர்நாள்
 அளத்தி பட்டத றிந்திலை யையநீ.