(பொ-நி.) தண்டு எழ, நீ அளத்தி: பட்டது அறிந்திலை; (எ-று.)
(வி-ம்.) தளம் - அணிவகுப்பு. அளத்தி. ஓர் ஊர். பட்டது - அடைந்த துன்பம். (74) இதுவும் அது 386. | தண்ட நாயகர் காக்கும் நவிலையிற் | | கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ. |
(பொ-நி.) நவிலையில் கொண்டது ஆயிரம் குஞ்சரமல்லவோ? (எ-று.)
(வி-ம்.) தண்டநாயகர்-படைத்தலைவர். நவிலை: ஓர் ஊர். காண்டது - கைப்பற்றியது. குஞ்சரம்-யானை. (75) இதுவும் அது 387. | உழந்து தாமுடை மண்டலந் தண்டினால் | | இழந்த வேந்த ரெனையரென் றெண்ணுகேன். |
(பொ-நி.) மண்டலம் தண்டினால் இழந்த வேந்தர் எனையர் என்று எண்ணுகேன்; (எ-று.)
(வி-ம்.) தாம் உழந்து உடை என இயைக்க. உழந்து - வருந்தி. மண்தலம் - மண்ணுலகம். எனையர்-எத்துணையர். எண்ணுகேன்-கணக்கிட்டுச் சொல்வேன். (76) இதுவும் அது 388. | கண்டு காணுன் புயவலி நீயுமத | | தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே. | (பொ-நி.) தண்டுகொண்டு சக்கரம் வந்தது, நீயும்கண்டு உன் புயவலி காண்; (எ-று.) (வி-ம்.) கண்டு போர் செய்து கண்டு. தண்டுகொண்டு-படைகளைத் திரட்டிக்கொண்டு. சக்கரம்-திருமாலின் சக்கரம் போன்ற கருணாகரன். (77) இதுவும் அது 389. | இன்று சீறினும் நாளையச் சேனைமுன் | | நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால். |
|