யானைநிரை கடலணை போன்றமை 494. | புவிபுரந் தருள்செயும் சயதரன் ஒருமுறைப் | | புணரிமெல் அணைபடப் பொருவில்வில் குனிதலின் கவிகுலம் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக் கரிகளின் பிணம்இதிற் காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) ஒருமுறை சயதரன் வில் குனிதலின், கவிகுலம் கடலிடைச்சொரி, பெருங்கிரி என, இதில் கரிகளின் பிணம் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) புவி - உலகு. புரந்து - காத்து: வினையெச்சம். சயதரன் -குலோத்துங்கன் (ஆகிய திருமால்) ஒரு முறை இராமனாய்ப் பிறந்தகாலை. புணரி -கடல். பட-உண்டாக. பொருவு இல் - ஒப்பற்ற. குனிதல் - வளைதல். இராமன் வில்வளைத்துக் கணைதொடுத்த பின்பே வருணன் பணிந்தமையின் இங்ஙனம் கூறப்பட்டது, கவி-குரங்கு, கிரி-மலை, கரி-யானை. (23) வில் திறன் கண்டு வியந்த வீரர் நிலை 495. | உற்றவாய் அம்புதம் பரிசையும் கருவியும் | | உருவிமார் பகலமும் உருவிவீழ் செருநர்வில் கற்றவா ஒருவன்வில் கற்றவா என்றுதம் கைம்மறித் தவரையும் காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) அம்பு, உருவி உருவி, வீழ் செருநர், "ஒருவன் வில் கற்றவா, வில்கற்றவா" என்று, தம் கை மறித்தவரையும் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) உற்ற-அடைந்த. வாய்-தம்உடலிடம். அம்பு-எதிரி விடுத்த அம்பு. பரிசை - கேடகம். கருவி - கவசம். செருநர்-வீரர். ஒருவன்: கருணாகரன். கைமறித்தவரையும் (இவன் வீரர்களால் எதிர்க்க இயலாதவனென அவன் பெருமையை வியந்து) கையை யசைத்தவர்களையும். (24) கண்விழித்துக் கிடக்கும் வீரர் நிலை 496. | விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய் | | மீதுபோ முயிர்களே யன்றியே இன்றுதம் கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களும் கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ. | |