(பொ-நி.) சூரர் நேரான போழ்து, ஆடுகின்றார் தலை, அற்று எழுந்து, சயப்பாவை விட்டு ஆடும் வட்டு ஒத்தல், காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) நேராதல் - எதிர் இடல். அற்று, எழுந்து, ஒத்தல் காண்மின் என இயைக்க. ஆடுதல் -போர்புரிதல். மானம்-பெருமை. சயப்பாவை - வீர மகள், வட்டு -அம்மானைக்காய். (20) விசும்பில் கண்ட காட்சி 492. | எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய் | | ஏறுமா னவர்கள்தாம் எண்ணுதற் கருமையின் கதிர்விசும் பதனிலே இதனிலும் பெரியதோர் காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) விமானங்களில் ஏறும் மானவர்கள், எண்ணுதற் கருமையின், விசும்பதனில் பெரியதோர் காளையம் விளையுமா காண்மின்; (எ-று.) (வி-ம்.) சுரர் - தேவர். விமானம் - வானூர்தி. மானவர் - மனிதர்; வீரர்.கதிர்-ஒளி. விசும்பு-வானம். காளையம் - வீரர் கூட்டம். (21) குருதிக் கடல் 493. | அவர்இபஞ் சொரிமதங் கழிஎனப் புகமடுத் | | தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தம் கவரிவெண் நுரைநிரைத் தவருடற் குருதியின் கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ. | (பொ-நி.) மதம் கழி என மடுத்து, பரித்திரை அலைத்துக்கவரி வெண்ணுரை நிரைத்து, உடற் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்மின்; (எ-று.) (வி-ம்.) அவர்-கலிங்கர், இபம்-யானை. கழி-கடற்கரைக் கால்வாய். புக மடுத்து-தன்னுடன் வந்து விழ, தான் ஒன்றாகக் கலந்து. பரி-குதிரை. திரை - அலை. குதிரை அலைகளைப் போன்றிருந்தன வென்க அமர் -போர். கவரி நுரை போன்றிருந்தன என்க. அவர். கலிங்கர். யானையின் மதநீர் கடற்கால்வாய் போன்றிருந்ததென்க. குருதியே கடலாமென்க. (22) |