பக்கம் எண் :

களம் பாடியது195


     (பொ-நி.) சூரர்  நேரான  போழ்து,  ஆடுகின்றார்   தலை,  அற்று
எழுந்து,  சயப்பாவை  விட்டு ஆடும் வட்டு ஒத்தல், காண்மின்கள்; (எ-று.)

     (வி-ம்.) நேராதல் - எதிர் இடல். அற்று, எழுந்து,  ஒத்தல் காண்மின்
என இயைக்க. ஆடுதல் -போர்புரிதல். மானம்-பெருமை.  சயப்பாவை  - வீர
மகள், வட்டு -அம்மானைக்காய்.                                  (20)

விசும்பில் கண்ட காட்சி

492.எதிர்கொளுஞ் சுரர்விமா னங்களிற் சுரர்களாய்
     ஏறுமா னவர்கள்தாம் எண்ணுதற் கருமையின்
கதிர்விசும் பதனிலே இதனிலும் பெரியதோர்
   காளையம் விளையுமா காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.)   விமானங்களில்    ஏறும்    மானவர்கள்,   எண்ணுதற்
கருமையின், விசும்பதனில் பெரியதோர்  காளையம்  விளையுமா  காண்மின்;
(எ-று.)

     (வி-ம்.) சுரர் - தேவர்.  விமானம் - வானூர்தி.  மானவர் - மனிதர்;
வீரர்.கதிர்-ஒளி. விசும்பு-வானம். காளையம் - வீரர்  கூட்டம்.        (21)

குருதிக் கடல்

493.அவர்இபஞ் சொரிமதங் கழிஎனப் புகமடுத்
     தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தம்
கவரிவெண் நுரைநிரைத் தவருடற் குருதியின்
   கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.) மதம்  கழி  என  மடுத்து,  பரித்திரை  அலைத்துக்கவரி
வெண்ணுரை நிரைத்து, உடற் குருதியின் கடல்  பரந்து  ஓடுமா  காண்மின்;
(எ-று.)

     (வி-ம்.) அவர்-கலிங்கர், இபம்-யானை.  கழி-கடற்கரைக்  கால்வாய்.
புக மடுத்து-தன்னுடன் வந்து  விழ, தான்  ஒன்றாகக்  கலந்து.  பரி-குதிரை.
திரை - அலை.  குதிரை  அலைகளைப்  போன்றிருந்தன  வென்க  அமர்
-போர். கவரி நுரை  போன்றிருந்தன  என்க.  அவர். கலிங்கர். யானையின்
மதநீர் கடற்கால்வாய் போன்றிருந்ததென்க. குருதியே கடலாமென்க.
                                                          (22)