பக்கம் எண் :

194கலிங்கத்துப்பரணி

     இழுத்துக்  கட்டிய   கயிற்றின்  துணையால்  கீழே  விழாமல் நிற்பது
போன்றிருந்தன என்க.                                        (17)

களத்தில் கழுகும் பருந்தும் கண்ட காட்சி

489. இருப்புக்க வந்தத்தின் மீதேற
      லும்சூரர் எஃகம்பு தைக்க இறகைப்
பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட
     ஈதோர் பருந்தாடல் காண்மின்களோ.
 
     (பொ-நி.) கவந்தத்தின்மீது ஏறலும், சூரர்  இருப்பு எஃகம்  புதைக்க.
இங்கு   இறகைப்  பரப்பிச்  சுழன்று  பாறாட,  பருந்தாடல்  காண்மின்கள்;
(எ-று.)

     (வி-ம்.)இருப்பு எஃகம் என இயைக்க.  கவந்தம் - தலையற்ற உடல்
இருப்பு எஃகம் -இரும்பு வேல்.  புதைக்க - (உடம்பில்) அழுந்த.  இறகைப்
பரப்பி-சிறகுகளை விரித்து. பாறு-கழுகு.                           (18)

வில் வாள் வீரர் கிடந்தமை கண்டு கூறியது

490. வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து
      றாமேவில் வாள்வீரர் வாணாளுகக்
கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற
     றச்செய்த கைம்மாறு காண்மின்களோ.

     (பொ-நி.)வில்  வாள்  வீரர்  சேனை,  தம் சேனை மேல் உறாமே;
சேவகம் செய்து, செஞ்சோறு அறச்செய்த கைம்மாறு  காண்மின்கள்; (எ-று.)

     
(வி-ம்.) வரும்  சேனை -எதிர்த்துவரும் படைகள், உறுதல்-சார்(ந்து
அழித்)தல்.  வாணாள் - தங்கள்  வாழ்நாள.்  உக-கெட.  கருமை-வலிமை.
கருஞ்சேவகம் -வலிமை காட்டும் போர்ச்செயல். செஞ்சோறு-செஞ்சோற்றுக்
கடன். அற-கழிய. கைம்மாறு-மாற்றுதவி.                          (19)

யானைவீரர் தலையின் காட்சி

491.யானைப்ப டைச்சூரர் நேரான
      போழ்தற் றெழுந்தாடு கின்றார்தலை
மானச்ச யப்பாவை விட்டாடும்
     அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ.