(பொ-நி.) செங்களத்தே நிணப்போர்வை மூடிக்கொள, கருங்காகம் வெண்காகமாய் நின்ற ஆ(று) காணாத காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) ஆகவம்-போர். தயங்குதல்-விளங்குதல். நிணம் - கொழுப்பு. நின்றவா-நின்றவாறு என்ன வியப்பு. காணாத - இதுவரை காணாதவற்றை. பிணங்களின் கொழுப்பு காக்கைகளின் மேல் மூடுதலால். கருநிறம் மாறி வெண்ணிறமாகத் தோற்றங் கொண்டதென்க. (15) களம் தாமரைப் பொய்கை போன்று காட்சியளித்தது 487. | மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க | | வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா சடையொக்க அடுசெங்க ளம்பங்க யப்பொய்கை யாமாறு காண்மின்களோ. |
(பொ-நி.) தேர் மொட்டு மொட்டு ஒக்க, சோரி நீர் ஒக்க, தொங்கல் பாசடைஒக்க, செங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) மிடைதல்-நெருங்குதல், மொட்டு - தேரின் கூம்பு, மொட்டு -தாமரை மொட்டு. சோரி-குருதி. தொங்கல்-ஆடவர்மயிர். பாசடை- பசிய இலை. அடுசெங்களம் - போர்புரிகின்ற சிவந்த போர்க்களம். பங்கயம் -தாமரை. (16) வேல் தைத்து நிலத்துவிழா வீரர்நிலை 488. | வெயில்தாரை வேல்சூழ வும்தைக்க | | மண்மேல் விழாவீரர் வேழம்பர்தங் கயிற்றா லிழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய்ஒத்தல் காண்மின்களோ. |
(பொ-நி.) வேல்தைக்க, விழாவீரர், வேழம்பர்தம் கயிற்றால் சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்மின் ; (எ-று.) (வி-ம்.) வெயில்- ஒளி. தாரை - ஒழுங்கு. சூழவும் - உடலெங்கும். வேழம்பர்-கழைக்கூத்தர். கழாய் - மூங்கில். வீரர்களின் உடல் முழுதும் தைத்த அம்புகளால், வீரர் இறந்தும் தரையில் வீழாமல் நிற்குங் காட்சி, கழைக் கூத்தர் கயிற்றால் |