பக்கம் எண் :

கடை திறப்பு23


நோயும் மருந்துமாந்தன்மை கூறி விளித்தது

55.தங்குகண் வேல்செய்த புண்களைத்
     தடமுலை வேதுகொண் டொற்றியும்
செங்கனி வாய்மருந் தூட்டுவீர்
   செம்பொன் நெடுங்கடை திறமினோ.

     (பொ-நி.) கண்வேல்  செய்த  புண்களை,  வேதுகொண்டொற்றியும், வாய்மருந் தூட்டுவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.)கண்வேல் - ( தம்) கண்ணாகிய வேல். வேது - நோய்க்குச்
சூடான பொருள்களால் வேது கொடுத்தல் இயல்பாம். ஒற்றுதல் - ஒற்றடங்
கொடுத்தல்.   தங்கு - படிந்த;  சேர்ந்த.  வெப்பம்  ஊட்டுதல்.  இதனை
'கொம்மை  வரி  முலை  வெம்மைவேதுறீஇ' என்றார் இளங்கோவடிகளும்.
வாய்மருந்து  -  அதரபானம்.  புண்ணுக்கு  வேதும்  மருந்தும்  ஈண்டுக்
கூறப்பட்டன.                                              (35)

இதுவும் அது

56. பொருங்கண் வேலிளைஞர் மார்பி னூடுருவு
    புண்கள் தீரஇரு கொங்கையின்
கருங்கண் வேதுபட ஒற்றி மென்கைகொடு
   கட்டு மாதர்கடை திறமினோ.

     (பொ-நி) கண்வேல் மார்பினூடு உருவு புண்கள் தீர வேதுபட ஒற்றி,
கைகொடு கட்டு மாதர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) பொரும்-தாக்குகின்ற. கண்வேல்-(தங்கள்)கண்ணாகிய வேல்.
இளைஞர் - ஆடவர்.  மார்பின்  ஊடுருவு  புண்கள் - மனத்தே புகுந்த
காமத்தீயைக்  குறித்தன. கண்-முலைக்கண். வேதுபட - நோய்க்கு  வேது
கொடுப்பதுபோல் இருக்க. கட்டும் - நோய்க்குக் கட்டுக் கட்டுதல்  போல்
இறுகத்  தழுவும்.  புண்ணுக்கு  வேது  கொடுத்தலும்   கட்டுக்கட்டுதலும்
ஈண்டுக் கூறப்பட்டன.                                       (36)

கூந்தலியல்பு கூறி விளித்தது

57.இடையி னிலையரி திறுமிறு மெனஎழா
    எமது புகலிடம் இனிஇலை யெனவிழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம்
   அளக வனிதையர் அணிகடை திறமினோ.