திருமால் வணக்கம் 3. | ஒருவயிற்றிற் பிறவாது | | பிறந்தருளி உலகொடுக்கும் திருவயிற்றிற்று ஒருகுழவி திருநாமம் பரவுதுமே. |
| | 4. | அந்நெடுமால் உதரம்போல் | | அருளபயன் தனிக்கவிகை இந்நெடுமா நிலமனைத்தும் பொதிந்தினிது வாழ்கவென்றே. | (பொ-நி) கவிகை பொதிந்து வாழ்க என்று, உலகு ஒடுக்கும் வயிற்றிற்று குழவி நாமம் பரவுதும்; (எ-று.) (வி-ம்.) ஒடுக்குதல்-அடைத்தல், வயிற்றிற்று-வயிற்றையுடையது. குழவி - குழந்தை. கண்ணன் - திருமால். நாமம்-பெயர். பரவுதும்- வணங்குவோம். நெடுமால் - நீண்ட திருமால். உதரம் -வயிறு. கவிகை-குடை. பொதிந்து- தன்னுள் அடக்கி. உதரம் அடக்கியதுபோல் கவிகை அடக்கி வாழ்க என்க. அபயன் உலக முழுவதும் காப்பது குறிக்கப்பட்டது. (3, 4) நான்முகன் வணக்கம் 5. | உகநான்கும் பொருள்நான்கும் | | உபநிடதம் ஒருநான்கும் முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. | | | 6. | நிலநான்கும் திசைநான்கும் | | நெடுங்கடல்கள் ஒருநான்கும் குலநான்கும் காத்தளிக்கும் குலதீபன் வாழ்கவென்றே. |
(பொ-நி) குலநான்கும் அளிக்கும் குலதீ்பன் வாழ்க என்று, முகம் நான்கும் உடைய முதல்வனைப் பரவுதும். (எ-று.) |