(வி-ம்.) உகம்-யுகம்; ஊழிக்காலம். பொருள் நான்கு-அறம், பொருள், இன்பம், வீடு. உபநிடதம் நான்கு - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். முதல்வன் - பிரமன். நிலநான்கு - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். அளித்தல் - அருள் செய்தல். குலதீபன் - குலோத்துங்கன். குலஞ்சிறந்து விளங்க நின்றமையின் குலதீபன் என்றார். ஈண்டும் ஆட்சிப் பரப்புக் குறிக்கப்பட்டது. (6, 7) ஞாயிற்று வணக்கம் 7. | பேராழி உலகனைத்தும் பிறங்கவளர் இருள் நீங்க | | ஓராழி தனைநடத்தும் ஒண்சுடரைப் பரவுதுமே. |
8. | பனியாழி உலகனைத்தும் பரந்தகலி யிருள்நீங்கத் | | தனியாழி தனைநடத்தும் சயதுங்கன் வாழ்கவென்றே. |
(பொ-நி.) இருள் நீங்க, ஆழி நடத்தும் சயதுங்கன் வாழ்க என்று, இருள்நீங்க ஓராழிதனை நடத்தும் சுடரைப் பரவுதும். (எ-று.)
(வி-ம்.) ஆழி-கடல், பிறங்க-விளங்க. ஓராழி-ஒற்றைச் சக்கரத் தேர். சுடர்- ஞாயிறு. பனி - குளிர்ச்சி. ஆழி -கடல். பரந்த-பரவிய. கலி-துன்பம், ஆழி - ஆணைச்சக்கரம். சயதுங்கன்- குலோத்துங்கன். ஈண்டும் ஆட்சிப் பரப்புக் குறிக்கப்பட்டது. (7. 8) யானைமுகன் வணக்கம் 9. | காரணகா ரியங்களின்கட் டறுப்போர் யோகக் | | கருத்தென்னுந் தனித்தறியிற் கட்டக் கட்டுண்டு ஆரணமா நாற்கூடத் தணைந்து நிற்கும் ஐங்கரத்தது ஒருகளிற்றுக்கு அன்பு செய்வாம். |
10. | தனித்தனியே திசையானைத் தறிக ளாகச் | | சயத்தம்பம் பலநாட்டி ஒருகூ டத்தே அனைத்துலகுங் கவித்ததெனக் கவித்து நிற்கும் அருட்கவிகைக் கலிப்பகைஞன் வாழ்கவென்றே. |
|