(பொ-நி.)  சயத்தம்பம்   பல   நாட்டி,  கவித்து  நிற்கும்  கவிகைக்   கலிப்பகைஞன் வாழ்க என்று, கட்டுண்டு, நாற்கூடத்து  அணைந்து நிற்கும்   ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்; (எ-று.)         (வி-ம்.)காரண  காரியக்கட்டாவது  அகப்பற்றும் புறப்பற்றும்; அவை   உடல்  மனைவி  மக்கள்மேல்  உண்டாவன.   கட்டறுப்போர் - யோகியர்.     யோகம்-மன ஒருமைப்பாடு. தறி-கட்டுத்தறி. ஆரணம்- மறை. கூடம்-யானை   கட்டுமிடம். தறி-தூண். சயத்தம்பம் - வெற்றித்தூண்.  வெற்றி பெற்றமைக்கு   அடையாளமாகக்  கல்தூண்  நிறுவிவைப்பது.  கூடம் -  அண்டகோளகை   கவிதை  -  குடை,    குடைக்கு  அண்டகோளகை  உவமையாம்  என்க.     கலிப்பகைஞன் -  துன்பத்தை ஒழிப்போனாகிய  குலோத்துங்கன். அபயன்   புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது.                              (9, 10)	 	ஆறுமுகன் வணக்கம்  | 11. | பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய |  |   |     நிறம்படைத்த புயமும் கண்ணும்          பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான்         அடித்தலங்கள் பணிதல் செய்வாம். |   
   | 	12. | ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந்து |  |   |    ஒருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும்            ஈரிரண்டு படைத்துடைய இரவிகுலோத்     தமனபயன் வாழ்க வென்றே. |             (பொ-நி) நிலைபெறவந்து,  கடலும்  திக்கும் படைத்துடைய அபயன்  வாழ்க என்று,  புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் உடையான்   அடித்தலங்கள்  பணிதல்  செய்வாம்; (எ-று.)         (வி-ம்.) இரண்டு     பொன்வரை     தோற்கும்என     இயைக்க. இணைப்புயங்களுக்கு  இருவரை உவமை என்க.பொரு-ஒப்பு, புயம்-தோள்.   இரண்டு குலம்-தாய்தந்தையர் குலம். ஈரிரண்டுகடலும் திக்கும் என இயக்க.   இரவி-ஞாயிறு.  குலோத்தமன்;  குல+உத்தமன்.  தன்  மரபிற்  சிறந்தவன், மேலானவன். ஈண்டும் ஆட்சிப் பரப்பே குறிக்கப்பட்டது.(11, 12)நாமகள் வணக்கம்   | 13. | பூமாதுஞ் சயமாதும் பொலிந்து  வாழும் |  |   |     புயத்திருப்ப மிகவுயரத் திருப்பள் என்று            நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி       நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே. |   
  |