(பொ-நி.) சயத்தம்பம் பல நாட்டி, கவித்து நிற்கும் கவிகைக் கலிப்பகைஞன் வாழ்க என்று, கட்டுண்டு, நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்; (எ-று.) (வி-ம்.)காரண காரியக்கட்டாவது அகப்பற்றும் புறப்பற்றும்; அவை உடல் மனைவி மக்கள்மேல் உண்டாவன. கட்டறுப்போர் - யோகியர். யோகம்-மன ஒருமைப்பாடு. தறி-கட்டுத்தறி. ஆரணம்- மறை. கூடம்-யானை கட்டுமிடம். தறி-தூண். சயத்தம்பம் - வெற்றித்தூண். வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகக் கல்தூண் நிறுவிவைப்பது. கூடம் - அண்டகோளகை கவிதை - குடை, குடைக்கு அண்டகோளகை உவமையாம் என்க. கலிப்பகைஞன் - துன்பத்தை ஒழிப்போனாகிய குலோத்துங்கன். அபயன் புகழ் மேம்பாடு குறிக்கப்பட்டது. (9, 10) ஆறுமுகன் வணக்கம் 11. | பொன்னிரண்டு வரைதோற்கும் பொருவரிய | | நிறம்படைத்த புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம். |
12. | ஓரிரண்டு திருக்குலமும் நிலைபெறவந்து | | ஒருகுடைக்கீழ்க் கடலுந் திக்கும் ஈரிரண்டு படைத்துடைய இரவிகுலோத் தமனபயன் வாழ்க வென்றே. | (பொ-நி) நிலைபெறவந்து, கடலும் திக்கும் படைத்துடைய அபயன் வாழ்க என்று, புயமும் கண்ணும் பன்னிரண்டும் ஆறிரண்டும் உடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம்; (எ-று.) (வி-ம்.) இரண்டு பொன்வரை தோற்கும்என இயைக்க. இணைப்புயங்களுக்கு இருவரை உவமை என்க.பொரு-ஒப்பு, புயம்-தோள். இரண்டு குலம்-தாய்தந்தையர் குலம். ஈரிரண்டுகடலும் திக்கும் என இயக்க. இரவி-ஞாயிறு. குலோத்தமன்; குல+உத்தமன். தன் மரபிற் சிறந்தவன், மேலானவன். ஈண்டும் ஆட்சிப் பரப்பே குறிக்கப்பட்டது.(11, 12)நாமகள் வணக்கம் 13. | பூமாதுஞ் சயமாதும் பொலிந்து வாழும் | | புயத்திருப்ப மிகவுயரத் திருப்பள் என்று நாமாதும் கலைமாதும் என்னச் சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலு வாமே. |
|