பக்கம் எண் :

6கலிங்கத்துப்பரணி

14.எண்மடங்கு புகழ்மடந்தை நல்லன் எங்கோன்
     யானவன்பால் இருப்பதுநன் றென்பாள்போல
மண்மடந்தை தன்சீர்த்தி வெள்ளை சாத்தி
   மகிழ்ந்தபிரான் வளவர்பிரான் வாழ்க வென்றே.
  
     (பொ-நி.)புகழ்மடந்தை "நல்லன்;  இருப்பது  நன்று"  என்பாள்போல,
மண்மடந்தை,  வெள்ளைசாத்தி  மகிழ்ந்தபிரான்  வாழ்க  என்று, பூமாதும்
சயமாதும்  புயத்திருப்ப,  உயரத்திருப்பளென்று,  நாவகத்துள் இருப்பாளை,
நவிலுவோம்; (எ-று.)

     (வி-ம்.) நான்முகன்   நாவினும்   புலவர்   நாவினும்  உறைதலாற்
கலைமகள் நாமகளெனப்பட்டாள். பூமாது-மண்மகள். சயமாது -வெற்றிமகள்.
என்று  இருப்பாளை,  என்ன  இருப்பாளை  எனத்  தனித்தனி இயைக்க.
சென்னி-குலோத்துங்கன்,  நவிலுவோம்-துதிப்போம்.   எண்மடங்கு-மற்றை
யரசர்களினும்  எட்டு  மடங்கு.   மண்மடந்தைக்குச்  சாத்தினான்  என்க.
மண்மடந்தை - நிலமாகிய மகள்.  சீர்த்தி-மிகுபுகழ்.  வெள்ளை-வெள்ளை
நிறத் தூய ஆடை; ஈண்டு ஆகுபெயர். ஈண்டும் அபயன் புகழ் மேம்பாடு
குறிக்கப்பட்டது.(13, 14)

உமை வணக்கம்

15. செய்யதிரு மேனியொரு பாதிகரி தாகத்
     தெய்வமுதல் நாயகனை எய்தசிலை மாரன்
கையின்மலர் பாதமலர் மீதும்அணு காநம்
   
கன்னிதன் மலர்க்கழல்கள்சென்னிமிசை வைப்பாம்.

16.கறுத்தசெழி யன்கழல்சி வப்பவரை யேறக்
     கார்முகம்வ ளைத்துஉதியர் கோமகன்முடிக்கண்
பொறுத்தமலர் பாதமலர் மீதணிய நல்கும்
   பூழியர்பி ரான்அபயன் வாழ்கஇனி தென்றே.

     (பொ-நி.) செழியன்  வரை  ஏற வளைத்து, உதியர் கோமகன் மலர்
பாதமலர்  மீதணிய  நல்கும்  அபயன்  வாழ்க  என்று,  கரிதாக  எய்த
சிலைமாரன் மலர் அணுகா கன்னிதன் கழல்கள் சென்னி மிசை வைப்பாம்;
(எ-று.)

     (வி-ம்.) செய்ய-சிவந்த.  கரிதாக  எய்த மாரன் என்க. தெய்வமுதல்
நாயகன்-சிவன். மாரன்-மன்மதன்.  மாரன்கை;   ஆறன்தொகை.  கன்னி
-உமை. கறுத்த-சினந்து பகைத்த. செழியன்-