அத்தகைய புகழ்வேளாண்
மரபிற்சேக்கி ழார்குடியில்
வந்தவருண் மொழித்தே வர்க்குத்
தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுத்
தலைமை யளித்தவர் தமக்குத் தனது பேறு
முத்தமச்சோ ழப்பல்ல வன்றா னென்று
முயர்பட்டங் கொடுத்திடவாங் கவர்நீர் நாட்டு
நித்தனுறை திருநாகே சுரத்திலன்பு நிறைதலினான்
மறவாத நிலைமை மிக்கார்.
என்று
சொல்லவவர் தமையழைத்தரச னிவரமைச்சரிவர்
பட்டமும்
மன்றன் மாலைபுனை தொண்டைமானென வகுத்தபின்
றமதுமண்டலம்
அன்றுவற்கம்வர வந்தடைந்தவரை யாற்றல் செய்து
தொண்டைமண்டலம்
நின்று காத்தபெரு மாளெனத் தமது பெயரையெங்கும்
நிறுத்தினார்.
இன்னை
வகையிற் கூறி யினப்படை முற்றுங்காட்ட
மன்னனிவ் வீரனைப் போற் கண்டிலே மெனமகிழ்ந்து
கொன்னுற வழைத்து நாமங்* கொந்தகப் பெருமா னென்றே
நன்னெறிப் பட்டங்கட்டி நல்கினான் பரிவட்டங்கள்.
(மெய்காட்டிட்ட
திருவிளையாடல்)
|