பூந்துகி
லாடையைக் கீறிச் சிலந்தியைப் பொற்கரத்தால்
வேந்தன்முன் காட்டி நிலைமைகொண் டான்வித்து வான்களுக்கு
ஆந்தை குலாதிபன் குழந்தைநல் வேல னமுதமுண்டு
வாழ்ந்தினித் தேவ ரனைவோரும் வாழ்கொங்கு மண்டலமே.
(கு
- ரை)
ஆந்தை குலத்தில் பிறந்த குழந்தை வேலன் என்பவன்
தமிழ்ப் புலவர்களையாதரித்து வாழ்ந்தவன். அவன் குலோத்துங்க
சோழனுக்குத் தொடையில் வந்த சிலந்தியைச் சோழனுக்கு மானம்
குறையாமலிருக்கும்படி அவனது ஆடையைக் கீறிக்காட்டியாற்றினான்.