பக்கம் எண் :

257

  புகழ் பகீரதிகுலர் அதிகுலர் போதிகுலர்
     ................முகில குலரும்
   
4.
தாருலவு வன்னிகுலர் தனசகுலர் பூத்தைகுலர்
     பாசைகுலர் சமுத்திரகுலர் புகழ்கின்ற
                        கர்ஞ்சிகுலரும்
தகைமிகு பாசைகுலர் தில்லைவே ளாளர்குலர்
     சாற்றுறு காசிகுலரும்
தகுமான வேழைகுலர் தில்லைவேளாளர்குலர்
     ...............................................................
சாற்றரிய காசிகுலர் தகைமைபெறு உரியகுலர்
     உத்தகுலர் உருமைகுலர் தலைமை
                       வேளாளர்குலரும்
தட்டைகுலர் தலையகுலர் தாழைகுலர் பூழைகுலர்
     தருபொன்னி வளநாடுளோர்
சாற்றரிய காராளர் கீர்த்தி தொண்ணூற்றாறு
     தண்டமிழ்க் கவிதை கொண்டோர்
சந்ததம் செறிகம்பர் ராமாயணக் கவிதை
     சாற்றுமே ரெழுபதுடனே
தந்திமுக னைங்கரற் கினிதாக முன்கையில்
     சந்தன முரைத்தளித்து
தயிரமுத மாகவுரை திருக்கை வழக்கமும்
     தகுபைந் தமிழமைந்தோர்
தாராள மாகவே யெழுபத்தொன் பதுநாடு
     சாற்றரிய வளநாட்டுளோர்
தர்ம ஆரியமாலை சூரியகுல சோழன்
     தக்கமீனவன் பாண்டியன்
தகுகொல்லி மலைவெற்பன் சேரமான் பெருமாள்
     தழைத்திடும் கொங்குதேசம்
தாரணி மதிக்கவே நாலாறு நாடுற்ற
     தகைமைவே ளாளரலவோ
தங்களுட கீர்த்தியைக் கொண்டாட அஞ்சுபடி
     தன்புலமை யாக வைத்து
தானுண் கலத்தினில் பழம்சர்க்கரையுடன்
     தகுந்தேன் மிகுந்துதவியே
சந்ததம் புகழ்கங்கை வங்கிசம் விளங்கவே
     தந்தமணவாழி பதினாறு
சாற்றவும் தமிழ்வேத மங்களங் கூறியே
     தாரணியில் மிகவாழ்கவே.