* கொங்கு வேளாளர் குலத்துப்பாடல்.
1.
|
சீருலவு மதுரையில் சொக்கேசர் மீனாட்சி செயலருள் கிருபையதனால் சிங்காச னாதிபதி அதிவீர பாண்டியன் செங்கோல் செலுத்துமன்னாள் திட்டமிகு ஒட்டியனை வெட்டி விருதிட்டுமே சிமாசனந் தனிலிருந்து சிரோரத்ன மகுடமும் ஆறுகால் பீடமுயர் தென்கடகு சூடாமணி திறல் வரிசை பெற்றிடும் விருதுமகுடாசலன் சிதம்பரப் பல்லவனுமே சேரகொங்கு நாலாறு நாட்டினிற் கீர்த்திபெறு செல்வனா ணூர்ச்சர்க்கரை சிவசமய முறைமைதவி ராதவே ணாவுடையர் சிறந்திடுங் காராளரில் சிவனுமைக் கன்பர்க் கிரவில் முளைவாரிச் செல்வமுட னமுதளித்தும் சேடன் பணாமுடி நாகத்தின் மணிதனைச் செந்தமிழ் தனக்குமீந்து சீர்பெறும் பழையனூர் நீலிபலிகொண்டிடும் செயகங்கை குலமரபுளோர் சித்திரமே ழிக்கொடிக் குவளைமா லைப்புயர் தென்றகாற்சிறை தவிர்த்தோர் சிங்காதனம் பெற்ற கம்பன்தமிழ்க் கடிமை செய்தினிய கீர்த்திபெற்றோர் செம்பகுலர் செல்வகுலர் தூரைகுலர் கூரைகுலர் செங்குனி செவந்திகுலரும் சீர்பெருகு சேரகுலர் தேவேந்திர விளையகுலர் செயபண்ணை கண்ணந்தையும் திரமான கன்னகுலர் காரிகுலர் பணையகுலர் திறல்பனங் காடைகுலரும் |
2.
|
காருலவு மினிதான காடைகுலர் ஆந்தைகுலர் கனிவுசாத் தந்தைகுலமும் கற்புயர் செம்பூத்தைகுலர் வண்ணக்கர் உண்ணக்கர் கனத்தபூச் சந்தைகுலமும் |
* இப்பாடல்தொகுதி நூலக ஏட்டுச் சுவடியில் உள்ளது. அதில், 'வேளார் கீர்த்தி 96 குலத்துப் பாடல்' என்று எழுதப்பெற்றுள்ளது.
|