பக்கம் எண் :

536நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

1‘அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதரைப்பான் பண்பு’

2‘தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது’

என, அருளுமாற்றால் அறிக. தண்மை - குளிர்ச்சி. தெரியல் - மாலை. தேர் வேந்தன் என்பதற்கு முதனிலைத்தொழிற் பெயராகக்கொண்டு தேர்ச்சி (தெளிதல் ; ஆராய்தலை) யுடைய அரசன் என்று பொருள் கூறலுமாம். (85)

புட்கரன், நளனிடம் வருதல்

419. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வல்நெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டான் எதிர்.

(இ - ள்.) மாயநெடும் சூதில் வஞ்சித்த வல்நெஞ்சன்-வஞ்ச மிக்க சூதாட்டத்தில் (நளனை ஏமாற்றி அவனுடைய நாடு நகர் முதலியவற்றைக்) கைப்பற்றி வஞ்சஞ் செய்த கல்நெஞ்சையுடையனாகிய புட்கரன், தூயநறுமலர் பூ சோலைவாய் - தூய்மையான மணம் பொருந்திய பூக்களையுடைய பொலிவுற்ற சோலையினிடத்தே, ஆய பெரும்தானை சூழ - சிறந்த பெரிய படைகள் சூழ்ந்து நிற்க, பெடை நடையாளோடும் இருந்தானை - அன்னப் பேடுபோன்ற மென்னடையுடைய தமயந்தியோடும் தங்கியிருந்த நளமன்னனை, எதிர்கண்டான் - நேரிற் போய்ப் பார்த்தான்.

(க - து.) நல்ல சோலையிடத்தே சேனைகள் சூழ்ந்து நிற்கத் தமயந்தியோடும் தங்கியிருந்த நளமன்னனைப் புட்கரன் போய் நேரிற் கண்டான் என்பதாம்.

(வி - ரை.) மாயநெடும், நெடுமாயம் என மாற்றி மிக்க வஞ்சம் என்று பொருள் கொள்ளலுமாம். நெடுமாயமாவது, கலியால் தான் வென்ற சூழ்ச்சிமிக்க வஞ்சம். வல் - வலிமை வலிமை யெல்லாவற்றினும் மிக்க வலிமையும் நெகிழாத தன்மையும் உடையதாகலான் வல் என்ற சொற்குக் கல் என்று பொருள் கூறப்பட்டது: ஆகுபெயர். தூய்மை - பரிசுத்தம். மலர்மாசற்றது; மென்மையுடையது ; கண்டாரால் விரும்பப்படும் தன்மை

1, 2. திருக்குறள் : 681, 685.