(இ-ள்.)
முதியோர்
பரவும் அமலனே - பெரியோர்கள் வாழ்த்துகின்ற
தூயவனே!, அருமை ....... தேவனே!, சொல்அரிய கருடன் - சொல்லுதற்கு
அரிய கருடனும், வானரம் - குரங்கும், அரவம் - பாம்பும், மூஞ்சூறு -
மூஞ்சுறும், சூகரம் - பன்றியும், கீரி - கீரியும், கலைமான் - கலைமானும்,
துய்ய பாரத்வாசம் - தூயதான கரிக்குருவியும், அட்டை - அட்டையும், எலி
- எலியும், புன்கூகை - இழிந்த கோட்டானும், சொல்பெருக மருவும் ஆந்தை
- மிகுதியாகப் பேசப்படும் ஆந்தையும், வெல்அரிய கரடி - வெல்லமுடியாத
கரடியும், காட்டு ஆன் - காட்டுப் பசுவும், பூனை - பூனையும், புலி - புலியும்
மேல்விளங்கும் இருநா உடும்பு - மேலாக விளங்கும் இருநாவையுடைய
உடும்பும், மிக உரைசெய் இவையெலாம் - (என) மிகுதியாகக் கூறப்படும்
இவை யாவும், வலம் இருந்து இடம்ஆகில் வெற்றி உண்டு அதிக நலம்ஆம்
- வலத்தில் இருந்து இடப்பக்கம் போனால் வெற்றியுண்டாகும்; மிகுதியான
நலமும் உண்டாகும், ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல்
- விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், ஒருதுடை
யிருத்தல் - ஒருகாலில் நிற்றல், பற்றல் - வந்து கையைப் பிடித்தல், ஒரு
தும்மம் - ஒற்றைத் தும்மல், ஆணையிடல் - ஆணையிடுதல், இருமல் - இரு
முதல், போகேல் என்ன உபசுருதி சொல் - போகாதே என்று காதில்
விழும்படி கூறுதல், இவை எல்லாம் அல்லல் தரும் - இவை யாவும் துன்பமே
தரும், நல்ல அல என்பர் - நல்லன அல்ல என்பர்.
63.
சகுனம் - 2
நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை
நாவிசிக் சிலியோந் திதான்
நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி
நாடரிய சுரபி மறையோர்
|
|