ஐவகைப்
புலன்வென்ற முனிவர்விண் ணவர்போற்றும்
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஐவகைப்புலன் வென்ற முனிவர் விண்ணவர்
போற்றும்
அமலனே - ஐந்து புலன்களையும் வென்ற முனிவரும் வானவரும் வாழ்த்தும்
தூயவனே!, அருமை ....... தேவனே!, கைவிலைக்குக் கொளும் பால் -
கைவிலைக்கு வாங்கும் பாலும், அசப்பால் - ஆட்டுப்பாலும், வரும் கார் ஆ
கறந்த வெண்பால் - வரும் காரா பசுவினிடம் கறந்த வெண்மையான பாலும்,
காளான், முருங்கை, சுரை, கொம்மடி, பழஞ்சோறு, காந்திக் கரிந்தசோறு,
செவ்வை இல் சிறுக்கீரை, பீர்க்கு, அத்தி, வெள்உப்பு, தென்னை வெல்லம்,
மலாவகம் - பிண்ணாக்கும், சீர்இலா வெள் உள்ளி - சிறப்பில்லாத
வெள்ளைப் பூண்டு, ஈர்உள்ளி - (சிறப்பில்லாத) வெங்காயமும், இங்குவொடு
- பெருங்காயத்துடன், சிறப்பு இல் வெண் கத்தரிக்காய் - சிறப்பில்லாத
வெள்ளைக் கத்தரிக்காயும், எவ்வம் இல் சிவன்கோயில் நிர்மாலியம் -
குற்றம் அற்ற சிவபெருமான் திருக்கோயிலினின்றும் கழிக்கப்பட்ட
பொருளும், கிரணம், இலகுசுடர் இல்லாத ஊண் - சூரியன் ஒளியும்,
விளங்கும் விளக்கு இல்லாத காலத்து உணவும், இவை யெலாம் சீலம்
உடையோர்க்கு ஆகா - இவை யாவும் ஒழுக்கமுடையோர்க்குத் தகாதவை,
எனப் பழைய நூல் உரைசெயும் - என்று பழைமையான நூல்கள் கூறும்.
(வி-ரை.)
ஐவகைப்புலன் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம். அசம்
- ஆடு. நிர்மாலியம் (வடமொழி) - கழிக்கப்பட்ட பொருள். எவ்வம் -
குற்றம். கிரணம் : இங்கு ஞாயிற்றின் கதிரைக் குறிக்கின்றது. |
|
|
|