பக்கம் எண் :

57

நற்பண்புடைய உறவினர் நகைக்குமாறு இழிந்த நிந்தைக்குரிய
செயல்களைப் புரியம் பேதையரும் பற்று அற்ற பேர்க்கு முன்பிணை
நின்று பின்புபோய்ப் பரிதவித்திடும் மூடரும் - எந்த ஆதரவும்
இல்லாதவர்களுக்கு முதலில் (ஆராயாமல்) பிணையாகச் சென்று, பிறகு
வருந்துகின்ற பேதையரும், கண்கெட்ட மாடு என்ன ஓடி இரவலர்மீது
காய்ந்து வீழ்ந்திடும் மூடரும் - குருட்டு மாட்டைபோல ஓடி யாசகர்மேல்
சீறி விழுகின்ற பேதையரும், இவர் எலாம் - இவர்கள் யாவரும் கற்று
அறிவிலாத முழு மூடருக்குக் கால்மூடர் அரைமூடர் - (நூல்களை)
உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும்
பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.

     (வி-ரை.) நாவலர் : திருநாவலூரிற் பிறந்தவர் (சுந்தரர்). பிணை -
ஈடு. சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்காகப் பரவையாரிடம் தூது
சென்று பரவையாரூடலைத் தவிர்த்தார். அதனால் அடியார்க்கு எளியர்
என்னும் தன்மை இங்குப் புலப்படுகிறது.

     (க-து.) கற்றறிமூடரே யாவரினும் பெருமூடராவர்.

       36. இதற்கு இது வேண்டும்

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்
     தம்புத்தி கேட்க வேண்டும்;
  தான்அதிக சூரனே ஆகினும் கூடவே
     தளசேக ரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
     கற்றோரை நத்த வேண்டும்;
  காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்
     கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
     சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;
  சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
     தூண்டுகோல் ஒன்று வேண்டும்;