|
|
|
1. |
பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய |
|
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு |
|
|
2. |
நாதமுநா தாந்த முடவு நவைதீர்ந்த |
|
போதமுங் காணாத போதமாய் - ஆதிநடு |
|
|
3. |
அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப |
|
பந்தந் தணந்த பரஞ்சுடராய் - வந்த |
|
|
4. |
குறியுங் குணமுமொரு கோலமுமற் றெங்கும் |
|
செறியும் பரம சிவமாய் - அறிவுக் |
|
|
|
|
குறிப்புரை |
|
1-36. முருகக்கடவுளுக்கும் சிவபெருமானுக்கும்
வேற்றுமை இன்மையின் சிவபெருமானுக்குரிய விசேடணங்கள் பல இக்கண்ணிகளில்
முருகககடவுளுக்கு ஏற்றிக் கூறப்படும். |
|
1. செங்கமலப்புத்தேள்-பிரமதேவர். பிரமதேவர்
செந்தாமரையில் இருப்பதாகவும் வெண்டாமரையில் இருப்பதாகவும் இருவேறு வகையாக்க்
கூறுவதுண்டு. ஒரே ஆசிரியர் இவ்விரண்டும் கூறுவது, “புறத்து மாயிரம்
வெள்ளிதழாலொரு புண்ட ரீகமு மண்ணலும் போலவே”, “செந்தாமரையோனை” (தக்க. 282, 698)
என்பவற்றையும் அவற்றின் உரை முதலியவற்றையுங் கொண்டு அறியலாகும். பா-யாப்பு;
பரப்புமாம். பாமேவு தெய்வப் பழமறை: “தொடுக்குங் கடவுட் பழம்பாடல்” (62.) தே
மேவு - தெய்வத்தன்மை பொருந்திய. புத்தேளும் பழமறையுமென்று கூட்டுக. |
|
2. நாதமும் - நாத தத்துவமும். நவை தீர்ந்த -
குற்றமற்ற. போதம் - அறிவு. |
|
3. நித்தியம் ஆனந்தம் போதம்: இம்மூன்றும்
சச்சிதானந்தமெனப்படும். பந்தம் தணந்த - இயல்பாகவே பாசத்தினின்றும் நீங்கிய. |
|
4. குறி - பெயர், கோலம் - உருவம், எங்கும்
செறியும் பரமசிவமாய்: “எங்கும், நீக்கமற நின்ற நிலைகாட்டி” என்பர் பின்; 28. |