|
|
|
5. |
கனாதியா யைந்தொழிற்கு மப்புறமா யன்றே |
|
மனாதிகளுக் கெட்டா வடிவாய்த் - தனாதருளின் |
|
|
6. |
பஞ்சவித ரூப பரசுகமா யெவ்வுயிர்க்கும் |
|
தஞ்சமென நிற்குந் தனிப்பொருளாய் - எஞ்சாத |
|
|
7. |
பூரணமாய் நிந்தமாய்ப் போக்குவர வும்பணர்வும் |
|
காரணமு மில்லாக் கதியாகித் - தாரணியில் |
|
|
8. |
இந்திரசா லம்புரிவோன் யாவரையுந் தான்மயக்கும் |
|
தந்திரத்திற் சாராது சார்வதுபோல் - முந்தும் |
9. |
கருவின்றி நின்ற கருவா யருளே |
|
உருவின்றி நின்ற வுருவாய்த் - திரிகரணம் |
|
|
10. |
ஆகவரு மிச்சை யறிவியற்ற லாலிலய |
|
போகவதி காரப் பொருளாகி - ஏகத் |
|
|
11. |
துருவு மருவு முருவருவு மாகிப் |
|
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள் |
|
|
12. |
மோம்முறும் பல்லுயிர்க்கு முத்தியளித் தற்குமல் |
|
பாகமுற வேகடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
|
|
|
|
|
5. மனாதிகளுக்கு - மனம் முதலிய கரணங்களுக்கு. |
|
6. பஞ்சவித ரூபம் - பிரமன், விஷ்ணு,
உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவருருவம்; “ஐந்தொழிற்கும், நீங்காத
பேருருவாய் நின்றோனே” என்பர் பின்; 59. தஞ்சம் - பற்றுக்கோடு, எஞ்சாத -
குறையாத. |
|
7. புணர்வு - சம்பந்தம்; “போக்கும் வரவும்
புணர்வுமிலாப் புண்ணியனே” (திருவாசகம் - சிவபுராணம்.)
|
|
8. கருவின்றி நின்ற கரு - ஸ்வயம்பு; “கருவுனா
லன்றியே கருவெலா மாயவன்” (தென்குடித் திட்டைத் தேவாரம்) அருளே உருவாய்; “கருணை
திருவுருவாய்” என்பர் பின்; 24. |
|
9-10. திருகரணம் ஆகவரும் இச்சை அறிவு இயற்றல்:
“கண்ட சத்திமூன்றுட் கரணமாய்” என்பர் பின்; 63. இச்சை அறிவு இயற்றல் - இச்சா
ஞானக் கிரியாசத்திகள்; இச்சை செயலறிவு” (35) இலயம்-ஒன்றுதல், போகம் - துய்த்தல்.
அதிகாரம் - தொழில் புரிதல், இச்சை முதலியவற்றின் இயல்புகளை, சிவஞான சித்தியார்
1-ஆம் சூத்திரத்து 63-ஆம் செய்யுளாலும் அதன் உரையாலும் உணரலாகும். போகம் -
துய்த்தல்.
|
|
11. உரு - உருவத் திருமேனி நான்கு; அரு -
அருவத்திருமேனி நான்கு; உருவரு - அருவுருவத் திருமேனி ஒன்று; இவற்றை நவந்தரு
|