நேரிசை யாசிரியப்பா 191. | முட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத் | | திரைவர வுறங்குக் குருகு விரிசிறைச் | | செங்கா னாரைக்குச் சிவபதங் கிடைத்தெனப் | | பைம்புன்ன் மூழ்கிப் பதும பீடத் | 5 | தூற்றமி றாமு முலப்பில் பஃறவம் | | வீற்றுவீற் றிருந்து நோற்பன கடுக்கும் | | குண்டுநீர்ப் பட்டத் தொண்டுறைச் சங்கமும் | | வண்டமிழ்க் கடலின் றந்துறைச் சங்கமும் | | முத்தகம் பயின்று காவியங் கற்றுச் | 10 | சித்திரப் பாட்டிய றேர்ந்தன செல்லும் | | தடம்பணை யுடுத்த தண்டமிழ்க் கூடல் | | இடங்கொண் டிருந்த விமையா முக்கட் | | கருமிடற் றொருவநின் றிருவடி வழுத்துதும் | | தாய்நலங் கவருபு தந்தயுயிர் செகுத்தாங் |
191. (அடி, 1-6) முள்ளையுடைய தண்டையும் பசிய இலையையும், நெடிய இதழையும் உடைய தாமரை மலரில். குருகு - நாரை. பதும பீடம் - தாமரையாகிய இருக்கை; யோகம் புரிவார்க்குரிய பதுமாஸனமென்று வேறொரு பொருள் தோன்றியது. ஊற்றம் - மனவுறுதி. உலப்பில் - அழிவில்லாத. வீற்று வீற்று இருந்து - தனித்தனியே இருந்து. கடுக்கும் - ஒக்கும்.
(7-10) சங்குக்கும் தமிழ்ச் சங்கத்துக்கும் சிலேடை. குண்டு ஆழம். பட்டம் - குளம். சங்கம் - சங்கு. தமிழாகிய கடலின் குளிர்ந்த துறைகளைப் பயிலும் சங்கமும்; சங்கம் - புலவர் கூட்டம். சங்கு முத்தை அகத்தே பயன்று காவில் இயங்குதல் அற்றுச், சித்திரமாகிய பாட்டின் இயலைபைத் தேர்ந்து முழங்குவனவாகச் செல்லும் என்க; கா - சோலை; இயங்கு - இயங்குதல்; சித்திரம் - அழகு; பாட்டு - பலவகை ஒலி. தமிழ்ச் சங்கமானது முத்தகமென்னும் செய்யுளைப் பயின்று காவியங்களைக் கற்றுச் சித்திரகவிகளின் இலக்கணத்தை ஆராய்வனவாகி நடைபெறும்; முத்தகம் - வினைமுற்றிய தனிச் செய்யுள்; சித்திரப் பாட்டியல் - அழகையுடைய பட்டயலென்னும் இலக்கணமும் ஆம்.
(11) தட பணை - பெரிய வயல்கள்.
|