பக்கம் எண் :

166குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

15
கிருபெருங் குரவரி னொருபழி சுமந்த
புன்றொழி லொருவற்குப் புகலின்மை தெரீஇ
அன்றருள் சுரந்த தொன்றோ சென்றதோர்
வலியாற் கருள்வதூஉ நோக்கி
எளியார்க் கெளியைமற் றென்பது குறித்தே.    
(88)

        எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
192.
குறுமுயலுஞ் சிலகலையு மிழந்தொருமா னுயிரைக்
   கொள்ளைகொள்ள வெழுந்தமதிக் கூற்றே யாற்றாச்
சிறுதுயிலும் பெருமூச்சுங் கண்டுமிரங் கலையாற்
   றெறுமறலி நீயேயித் தெண்ணி லாவும்

    (14-9) சோமசுந்தரக் கடவுள் மாபாதகந்தீர்த்த திருவிளையாடற் செய்தியும், கரிக்குருவிக்கு அருள் செய்த திருவிளையாடற் செய்தியும் இவ்வடிகளிற் கூறப்படும்.

    தாய் நலம் கவருபு: இடக்கர். செகுத்து - கொன்று. ஆங்கு; அசை நிலை. ஒருபழி - ஒப்பற்ற பாதகம். புகல் - அடைக்கலத் தானம். தெரீஇ - உணர்ந்து. சென்றதோர் - தன்பால் வந்து அடைந்ததாகிய ஒரு. வலியான் - கரிக்குருவி. எளியார்க்கு எளியை - எளியவர்களுக்கு எளியையாக உள்ளாய்; “எளியரெங்குளா ரென்று தேர்ந்துரேந், தளியை யாவதுன் னருளின் வண்ணமே” (திருவிளை. 47 : 15.) மற்று: அசைநிலை.

    (முடிபு.) ஒருவ, எளியை யென்பது குறித்து வழுத்துதும்.

    (கருத்து.) எளியார்க்கெளியையாதலை யெண்ணி எளியேமாகிய எம்மையும் ஆண்டருள்வாயென்னும் கருத்தினால் நின்னை வழுத்துவேம்யாம்.

    192. இது பிறையை நோக்கித் தோழி கூறியது.

    முயலென்றது களங்கத்தை. கலை - கிரணம். பிறைக்குக் களங்கமில்லையாதலின் முயலையிழந்ததாகக் கூறினாள். பிறையே. நீ ஒரு முயலையும் சில ஆண்மான்களையும் இழந்துவிட்டு வேறொரு பெண்மானின் உயிரைக் கொள்ள எழுந்தாயென ஓர் இகழ்ச்சிப் பொருள் தோற்றியது. ஒரு மான் - தலைவி. மதியாகிய கூற்றே; கூற்று - யமன். பெருமூச்சு - துயர மிகுதியால் விடும் மூச்சு; உயிர் நீங்குவோர்க்கு உளதாகும் ஊர்த்துவ சுவாச மென்பது வேறு பொருள். மறலி - யமன். (பி-ம்.) ‘பாசமுமே’. உன்னுடைய பாசம் நிலாவுருவத்தை யெடுத்தது (675); கரிய உடலையுடைய நீ முதுகு வளைந்து முதிர்ந்த நரையினால் அக்கரிய நிறத்தையு