பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்39

சிற்றில்விளை யாடுமொரு பச்சிளம் பெண்பிள்ளை
   செங்கீரை யாடியருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
   செங்கீரை யாடியருளே.    
(3)

17.
மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு
   மழகதிர்க் கற்றைசுற்றும்
வாணயன மூன்றுங் குளிர்ந்தமுத கலைதலை
   மடுப்பக் கடைக்கணோக்கும்

பொங்குமதர் நோக்கிற் பிறந்தவா னந்தப்
   புதுப்புணரி நீத்தமையன்
புந்தித் தடத்தினை நிரப்பவழி யடியர்பாற்
   போகசா கரமடுப்ப

அங்கணொடு ஞாலத்து வித்தின்றி வித்திய
   வனைத்துயிர் களுந்தளிர்ப்ப
அருண்மடை திறந்தகடை வெள்ளம் பெருக்கெடுத்
   தலையெறிந் களவுகளும்

செங்கயல் கிடக்குங் கருங்கட் பசுந்தோகை
   செங்கீரை யாடியருளே
தென்னற்கு மம்பொன்மலை மன்னற்கு மொருசெல்வி
   செங்கீரை யாடியருளே.    
(4)

    (4) சிற்றிலென்றது அண்டங்களை. பச்சிளமை - மிக்க இளமை. பெண்பிள்ளை: விளி; வழக்கு.

    அம்பிகை உலகத்தை அடிக்கடியாக்குதலும் அவற்றைச் சிவபெருமான் அழித்தலுமாகிய செய்கைகளைச் சிறுமியர் சிற்றிலிழைத்தலும் சிறுவர் அதனை யழித்தலுமாகிய செயல்களாய உருவகித்துக கூறினார்.

    17, (அடி. 1) மங்குல் படு - கருமேகத்தையொத்த. சுந்தரம் - கழுத்து. கந்தரச் சுந்தரக் கடவுள்: 107. மழகதிர்க் கற்றை: 2.

    (1-2) கடைக்கண்ணால் நோக்கும் நோக்கில், பொங்கும் நோக்கிலென்க; நோக்கு - பார்வை. நிரப்புதலால் அடியார்கள் பால் போக சாகரம் மடுப்ப; அடியர் - இங்கே ஆன்மாக்கள். சிவபெருமான் போகியாக நிற்றலின் உயிர்களும் போகத்தை அடையுமென்பது கருத்து.

    (3) (பி-ம்.) ‘மடைதிறந்து’. அருள்மடை ...................கயல்: “கருணையின் முழுகிய கயறிரி பசிய கரும்பே” 922.)

    (4) (பி-ம்.) ‘செங்கயல் கடக்கும்’. தோகை: விளி.