பக்கம் எண் :

442குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

இமையா வறுங்கண் ணிமைத்தபைங் கூந்தற்
10
பசுந்தார் மஞ்ஞை யசைந்தமர் தோற்றம்
பொற்றுணர் பொதுளிய கற்பகப் பொதும்பர்
பொறிவண் டுண்ணா நறுமலர் தூற்றப்
பாடல் சான்ற கோடுபல தாங்கிக்
கவளங் கொள்ளாத் தவளமால் களிற்றிற்
15
கண்பல படைத்த கார்முகில் வண்ணத்
திந்திரன் பொலியு மெழினலங் காட்டும்
தண்பணை யுடுத்த தமிழ்ப்பெருங் கூடல்
வண்பதி புரக்கு மாசி மாமணி
தலைப்படு கலைமதி தாங்கா தாங்கத்
20
தலைப்படு கலைமதி தாங்கி நிலைப்படு
மானிட னாய வடிவுகொண் டருளாது
மானிட னாய வடிவுகொண் டருளி
எற்பணி பூணா தெற்பணி பூண்டு
பாரிடஞ் சூழாது பாரிடஞ் சூழ்தர
25
ஆரு ரமர்ந்த ஞானசம் பந்த

கண்ணைப்போல; புலன் - பொறிநுகர்ச்சிக்கு விஷயமான பொருள். இமையா வறுங்கண் - இமைத்தல் இல்லாத பார்வையற்ற வறியபீலிக்கண். கூந்தலென்றது தோகையை. தார் - கழுத்திலுள்ள கீற்று.

    (11-6) துணர் - பூங்கொத்து. பொதுளிய - செறிந்த. பொறி வண்டு - புள்ளிகளையுடைய வண்டு. கோடு - கொம்பு. தவளமால் களிறு - ஐராவதம் (பி-ம்.) ‘மாகளிற்றிற்’.

    (5-16) வேங்கைமலருக்குக் கற்பக மலரும், வெண்மலர்கள் செறிந்த புன்னைக்கு ஐராவதமும், மயிலுக்கு இந்திரனும் உவமைகள்.

    (17) தண்பணை - மருதநிலம். கூடல் - மதுரை.

    (19-25) சிவபெருமானே தம் உருவங் கரந்து மானிடச் சட்டை சாத்தி ஞானாசிரியராக வந்தாரென்பர்.

    தலைப்படு கலைமதி - சிரத்திலே பொருந்திய கலைகளை உடைய பிறை, சிறப்பையுடைய சாத்திர அறிவு. மானிடனாய வடிவு - மானை இடப்பக்கத்திலே உடையவனாகிய திருக்கோலம், மனிதனாகிய உருவம். எற்பு அணி பூணாது - என்பாகிய ஆபரணத்தை அணியாமல். எற்பணி பூண்டு - என்னைத் தொண்டு கொண்டு. பாரிடம் - பூதம், பூமி.