| திருமா முனிவர் சிகாமணியென் கோசீர் | | |
கட்டளைக் கலித்துறை 577. | தானவ னாகிய தன்மைபெற் றானடி தாழப்பெற்றால் | | தானவ னாகிய தன்மைபெற் றுய்வனத் தன்மையின்றித் | | தானவ னாகிய தன்மைபெற் றேற்கரு டாழ்சடிலத் | | தானவ னாகம் பெறாமாசி லாமணிச் சம்பந்தனே. |
நேரிசை யாசிரியப்பா 578. | பந்தனை தவிராச் சிந்தனை நிகர்ப்பப் | | பாயிருள் பரந்த மாயிரும் பொழிலிற் | | கொளற்குரி மாந்தர்க் களித்தல் செய்யா | | தரும்பூண் சுமந்த வறிவி லாளரிற் | 5 | சுரும்பூண் வெறுத்த துதைமலர் வேங்கை | | தன்மருங் குறீஇப் பொன்மலர் பிலிற்ற | | இலையறப் பூத்த சுதைமலர்ப் புன்னையின் | | மெய்ப்புல னோக்கார் கட்புலன் கடுப்ப |
577. தான் அவனாகிய தன்மை பெற்றான் - சிவோகம் பாவனை செய்தவன். அடி - நின் திருவடியை. தான் - அச் சிவஞானி. அவனாகிய தன்மை பெற்று - சிவமாம் இயல்பு பெற்று. உய்வன் - என்றும் மாறாது அந்நிலையிலிருப்பான்; “சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட, அத்தனெனக் கருளியவாறு” (திருவா.) அத்தன்மையின்றி - சிவோகம் பாவனையில்லாமல் தான்: அசைநிலை. அவனாகிய - வீணாகிய. தன்மை - நானே முதலென்றல். அருள் - அருள் புரிவாயாக. சடிலத்தானவன் நாகம் பெறா - சடையிலுள்ள சந்திரனையும் ஆபரணமாகிய நாகத்தையும் பெறாத; தானவன் - சந்திரன்; “உயர்வினா லெமன்வா னவன்கா ணுரைப்பா ருனக்குமொரு தானவப்பேர்” (சேக்கிழார் பிள்ளைத் தமிழ், அம்புலிப். 3). இறைவனே தன் திருவுருவத்தை மறைத்து மானிடச் சட்டை சாத்தி ஆசிரியராக எழுந்தருளினானென்று தெரிவித்தபடி.
578. (அடி, 1-17) மதுரையின் வளம் கூறப்படும்.
(1) பந்தனை - பற்று. சிந்தனை - மனம்.
(5-6) சுரும்பூண் வெறுத்த - வண்டுகள் தேனை உண்ணுதலை வெறுத்த, வேங்கைமலரில் வண்டு வீழாதென்பர். தன்னென்றது பின்வரும் புன்னையை. பிலிற்ற - உதிர்ப்ப.
(7-10) சுதைமலர் - வெண்ணிறமுடைய மலர். மெய்ப்புலன் நோக்கார் கட்புலன் கடுப்ப - உண்மையான பொருள்களைப் பாராத குருடர்களது
|