பக்கம் எண் :

440குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கொருகளஞ் செய்யு முழவ னாகி
மாநிலம் புரக்கு மாசி லாமணி
20
ஞானசம் பந்த ஞான தேசிக
நல்லருட் டிறத்தா னம்பி நீயே
பல்லுயிர்த் தொகுதியும் பயங்கொண் டுய்கெனக்
குடிலை யென்னுந் தடவய னாப்பண்
அருள்வித் திட்டுக் கருணைநீர் பாய்ச்சி
25
வேத மென்னும் பாதவம் வளர்த்தனை
பாதவ மதனிற் படுபயன் பலவே, அவற்றுள்
இலைகொண் டுவந்தனர் பலரே யிலையொரீஇத்
தளிர்கொண் டுவந்தனர் பலரே தளிரீஇ
அரும்பொடு மலர்பிஞ் சருங்கா யென்றிவை
30
விரும்பினர் கொண்டுகொண் டுவந்தனர் பலரே
அவ்வா றுறுப்பு மிவ்வாறு பயப்ப
ஓரும்வே தாந்தமென் றுச்சியிற் பழுத்த
ஆரா வின்ப வருங்கனி பிழிந்து
சாரங் கொண்ட சைவசித் தாந்தத்
35
தேனமு தருந்தினர் சிலரே யனவர்
நன்னிலை பெறுதற் கன்னிய னாயினும்
அன்னவர் கமலப் பொன்னடி விளக்கியத்
தீம்புன லமுத மார்ந்தன னதனால்
வேம்பெனக் கொண்டன்ன் விண்ணவ ரமுதே.    
(11)

நேரிசை வெண்பா
576.
விண்புரக்குஞ் சிந்தா மணியென்கோ மெய்ச்சுடரால்
மண்புரக்குஞ் சூளா மணியென்கோ - பண்பார்

    (23) குடிலை - சுத்தமாயை.

    (25) பாதவம் - மரம்.

    (27-31) வைதிக சைவத்தின் பிரிவுகளைச் சார்ந்தார் தத்தம் பக்குவத்திற்கேற்றவாறு பயனைப் பெற்றனரென்பது கருத்து.

    (32-5) சைவ சித்தாந்தத்தின் உண்மையை அறிவித்தபடி.

    (32) வேதாந்தம் - உபநிடதம்.

    (39) வேம்பெனக் கொண்டன்னென்றது வெறுத்தேனென்றபடி (154). விள்ளவரமுது - தேவாமிர்தம்.

    576. விண் - சுவர்க்கத்தை. என்கோ - என்பனோ. மெய்ச்சுடரால் - ஞான ஒளியால். சூளாமணி - முடிமணி.