பக்கம் எண் :

444குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

நேரிசை வெண்பா
579.
கண்ணிற் கணியாங் கதிர்மாசி லாமணியைப்
பண்ணிற் கணியாப் பகல்வரால் - எண்ணுங்காற்
பன்னூலிற் கோக்கப் படுமணியன் றிம்மணிமற்
றிந்நூலிற் கோக்குமணி யென்று.    
(15)

கட்டளைக்கலித்துறை
580.
எனவச மாகநில் லாதநெஞ் சாமிரும் பைக்குழைத்துத்
தன்வச மாக்கொண் டிழுக்கின்ற தாற்றொண்டர் தம்மையருள்
மன்வச மாகச் செயுமாசி லாமணி மாமணிக்குப்
பொன்வச மாகச்செய் காந்தமென் றேசொல்லப் போந்ததுவே.    
(16)

நேரிசை யாசிரியப்பா
581.
போந்தையங் கண்ணி வேந்துவிற் பொறித்த
மன்பெருங் கிரியின் மென்கரும் பெழுதித்
தேசுலாம் பசும்பொற் சிகரமந் தரத்தின்
வாசுகி பிணித்தென மணிக்கச் சிறுக்கிக்
5
கடாம்பொழி கரடக் களிநல் லியானை
படாம்புனைந் தென்னப் பைந்துகில் போர்த்துப்

    579. பண்ணிற்கணி - இசைப்பாட்டிற்கு அலங்காரமாக இருப்பவன்; பணி; ஆகுபெயர். பன் நூல் - பஞ்சினாலாகிய நூல்; பன் - பஞ்சு; இந்நூலில் - இந்தச் செய்யுள் நூலில். என்று பகல்வரால். ஏனைமணி பஞ்சினாலாகிய நூலிற் கோக்கப்படும்; இது செய்யுணூலிற் கோக்கப்படுமென்று இரண்டு மணிக்கும் வாசி கூறியவாறு.

    580. நெஞ்சாம் இரும்பை; “இரும்புதரு மனத்தேனை” (திருவா.) குழைத்து - குழையச்செய்து, பொன் - இங்கே இரும்பு. இந்தமணியை இரும்பை இழுக்கும் காந்தமென்றே சொல்லவேண்டு மென்றுபடி. மாமணிக்குத் தன்மை போந்ததுவென ஒருசொல் வருவித்துரைக்க.

    581. (அடி, 1-21) திருவாரூரின் சிறப்பைக் கூறுகின்றார்.

    (1) போந்தையங் கண்ணி வேந்து - பனங்குருத்தாலாகிய மாலையை அணிந்த சேரன். வில்லைப் பொறித்த.

    (2) கிரி - இமயமலை.

    (1-2) சேரன் இமயத்தில் விற்பொறியைப் பொறித்தமை, “அமை வரலருவி யிமையம்விற் பொறித்து” (பதிற். 2-ஆம் பத்துப் பதிகம்) என்பதனால் விளங்கும். கரும்பென்றது மன்மதனுடைய வில்லின் வடிவத்தை.