பக்கம் எண் :

524குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கட்டளைக் கலித்துறை
10.
இரைக்கு நதிவைகை பொய்கைபொற்  
றாமரை யீர்ந்தண்டமிழ்  
வரைக்கு மலைதென் மலயம  
தேசொக்கர் வஞ்சநெஞ்சைக்  
கரைக்குங் கனகள்வி கர்ப்பூர  
வல்லிக்குக் கற்பகத்தால்  
நிரைக்கும்பொற் கோயி றிருவால  
வாயுமென் னெஞ்சமுமே.  

நேரிசை வெண்பா
11.
நெஞ்சே திருக்கோயி னீலுண் டிருண்டகுழல்
மஞ்சேந் தபிடேக வல்லிக்கு - விஞ்சி
வருமந் தகாவென் வழிவருதி யாலிக்
கருமந் தகாவென் கருத்து.

கட்டளைக் கலித்துறை
12.
கருவால வாய்நொந் தறமெலிந்
   தேற்கிரு கான்மலரைந்
தருவால வாய்நின்ற தொன்றுத
   வாய்வன் றடக்கைக்குநேர்

வைத்துக்கொண்டிருந்தாற்போதும்; நீ ஏழையாதலால் குடிக்கூலி வேண்டேன்’ என ஒரு பொருள் தொனித்தது. “தொழும்ப ருளக்கோயிற்கேற்றும் விளக்கே” (குமர. 62) என்பது இங்கே நினைத்தற்குரியது.

    10. இரைக்கும் - முழங்கும். கர்ப்பூரவல்லிக்கு நதி வைகை. இங்ஙனமே ஏனையவற்றிற்கும் கூட்டியுரைக்க. பொற்றாமரை - பொற்றாமரைத் தீர்த்தம். வரைக்கும் - தன்னிடத்திலே அகப்படுத்திக்கொண்ட; வரைதல் - கொள்ளுதல். தென்மலயம் - பொதியில். கள்வி: இந்நூல் 3-ஆம் செய்யுளைப் பார்க்க. (பி-ம்.) ‘கற்பகத்தார்’. ‘கற்பகந்தார்’. கற்பகத்தாரென்னும் பாடத்திற்குத் தேவர்களென்னும் பொருள் கொள்க.

    11. வல்லிக்கு நெஞ்சே திருக்கோயில். நீல் - நீலம்; கருமை. குழலாகிய மஞ்சை; மஞ்சு - மேகம். விஞ்சி - மீறி. அந்தகா - யமனே. கருமம் தகா - உன் செயல்கள் தக்கனவல்ல. கருத்து என் - உன்னுடைய உட்கோள் யாது? (பி-ம்.) ‘தகாவுன் கருத்து’.

    12. அவாய் கருவால் நொந்து அற மெலிந்தேற்கு - மண் முதலியவற்றை ஆசைப்பட்டு அதன்பயனாக வந்த பிறவியால் துன்புற்று மிக இளைப்புற்ற எனக்கு. இரண்டு கான்மலரையுடைய ஐந்தருவாகி ஆல மரத்தினிடத்தே நின்ற பரம்பொருளாகிய ஒன்றை; சிவத்தை. உதவாய் -