கொச்சகக் கலிப்பா 12. | கடமலைக்கும் வெம்மலையாங் கைம்மலையு மாயிரவாய்ப் | படமலைக்கு மரவரசும் பரித்தருளும் பார்மடந்தை | குடமலைக்குந் தடமுலையாங் குலமலைக ளிரண்டெனவும் | வடமலைக்குந் தென்பொதியு மலயமலை யென்மலையே.13. | திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை | தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை | அங்கயற்க ணம்மைதிரு வருள்சுரந்து பொழிவதெனப் | பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே. | | | | | | | |
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 14. | கன்ன மதம்பெய் துறங்குகொலைக் | களிறு கிடந்து பிளிறுமலை | தென்னந் தமிழும் பசுங்குழவித் | தென்றற் கொழுந்துந் திளைக்குமலை | அன்னம் பயிலும் பொழிற்கூட | லறலங் கூந்தற் பிடியாண்ட | பொன்னங் குடுமித் தடஞ்சாரற் | பொதிய மலையென் மலையம்மே. | | | | | | | |
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் 15. | மந்தமா ருதம்வளரு மலையெங்கண் மலையே | வடகலைதென் கலைபயிலு மலையெங்கண் மலையே | கந்தவேள் விளையாடு மலையெங்கண் மலையே | கனகநவ மணிவிளையு மலையெங்கண் மலையே | | | |
12. கடம் அலைக்கும். கைம்மலையும் - திக்கயங்களும். அரவரசும் - ஆதிசேடனும். பரித்தருளும் - தாங்குகின்ற. குடத்தை அலைக்கும் பெரிய நகிலாகும் குலமலைகள் இரண்டு உண்டு என்று சொல்லும்படி. வடமலைக்கும் - வடமலையைக் காட்டிலும். தென் - அழகு. (பி-ம்.) ‘தென் பொதியம்’.
13. புயல் - மேகம்.
14. கன்னம் - காது. (பி-ம்.) ‘கன்னமதஞ் சாய்த்துறங்கு’. பிடி - மீனாட்சியம்மை.
15. மந்த மாருதம் - தென்றற் காற்று. வடகலை - வடமொழி. இச்செய்யுளின் மூன்றாவது அடி காணப்படவில்லை.
|