பக்கம் எண் :

530குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

வேறு
7.
ஆழிகைதா வழகாருமங் கயற்கணம்மை பங்கர்
அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி யம்மே.

வேறு
8.
பேசு மென்குறி மோச மென்றிடில்
ஆர்சொ லும்பரி யாசமே
வாச மென்குழ லாய்சவுந்தர
மாறர் வந்தணை வாரமே.

வேறு
9.
நங்கை நீகரு துங்குறி சொல்லவுன்
செங்கை தனைக்கொடு வாவெங்கள்
அங்க யற்கண்ணி பங்க ரருட்சொக்க
லிங்க ரினியணை வாரம்மே.

வேறு
10.
தூசுமொரு காசும்வையுண் ணேசம்வரவே சொல்லநான் 
ஈசர்கயி லாசர்மது ரேசருனைச்சேர் வாரம்மே. 

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
11.
கைக்குறியின் முகக்குறிநன் றிடத்தெழுந்த
   கவுளிநன்று கன்னி மார்வந்
திக்குறிநன் றென்கின்றா ரிடக்கண்ணுந்
   துடிக்கின்ற திதன்மே லுண்டோ
பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடிநீ
   யங்கயற்கட் பூவை மாதின்
மெய்க்குறியும் வளைக்குறியு முலைக்குறியு
   மணிந்தவர்தோண் மேவு வாயே.

    7. ஆழி கைதா - ஆழியை அணிந்த கையைத்தா; ஆழி - மோதிரம். ஆழிக்கை யெனற்பாலது ஓசை நோக்கி இயல்பாயிற்று.

    8. யாருடைய சொல்லும் பொருளற்ற பரியாசச் சொல்லேயாகும். அணைவார் அம்மே; அமே: இடைக்குறை.

    10. தூசு - ஆடை. நேசம் வரவே வை.

    11. இடத்து எழுந்த கவுளி நன்று - இடப்பக்கத்தே எழுந்த பல்லியின் சொல் நலமுடையது. கன்னிமார் - சத்தமாதர். மகளிருக்கு இடக்கண் துடித்தல் நன்னிமித்தம்; “நல்லெழிலுண்கணு மாடுமா லிடனே” (கலி. 11 : 22).