| பொருவால வாயெட்டுப் போர்க்களி | றேந்துபொற் கோயில்கொண்ட | திருவால வாய்மருந் தேதென்னர் | கோன்பெற்ற தெள்ளமுதே | | | |
நேரிசை வெண்பா 13. | தென்மலையுங் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப் | பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா | முலைக்குவடு பாய்சுவடு முன்காய மாலம் | மலைக்குவடு வன்றே மணம். | | | |
கட்டளைக் கலித்துறை 14. | மணியே யொருபச்சை மாணிக்க | மேமருந் தேயென்றுன்னைப் | பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் | லேனவர் பாற்செலவும் | துணியேன் றுணிந்ததை யென்னுரைக் | கேன்மது ரைத்திருநாட் | டணியே யனைத்துயிர்க் கும்மனை | நீயென் றறிந்துகொண்டே. | | | | | | | |
நேரிசை வெண்பா 15. | கொண்டைச் செருக்குங் குருநகையு நெட்டயிற்கட் | கெண்டைப் பிறக்கமும்வாய்க் கிஞ்சுகமுங் கொண்டம்மை | கற்பூர வல்லி கருத்திற் புகப்புகுந்தாள் | நற்பூர வல்லியுமென் னா. | | | |
வழங்குவாயாக, இறைவனைக் கற்பகமாகக் கூறுதல்: (குமர. 521, 549). தடக்கை நேர் பொருவாலவாய் - முன்னே தொங்கும் வளைந்த கையை ஒத்துப் பின்னே விளங்கும் வாலையுடையனஇவாகி. மதுரையாலயத்திலுள்ள இந்திர விமானம் எட்டுக் களிறுகளால் சுமக்கப்பெறுவது (குமர. 3).
13. தென்மலை - பொதியில். வெள்ளிமலையிலுள்ள பொன்மலை போன்ற சிவபெருமானுக்கு. முலைக்குவட்டினால் உண்டான சுவடு மார்பிடத்தே காயமாக நின்றது. அஃது அம்மலைக்கு வடுவாகாமல் மணமாதற்குக் காரணமாயிற்று; முதுகிற் பட்டிருந்தால் வடு ஆகுமென்றபடி.
14. அறிந்துகொண்டு பணியேனென்க. துணிந்ததை - அடியேன் துணிந்த தீங்கான செயலை.
15. பிறக்கம் - மிளிர்தல். வாய்க் கிஞ்சுகம் - வாயாகிய முள்ளு முருங்கைமலர். கற்பூரவல்லி கொண்டைச் செருக்கு முதலியவற்றோடு
|