532குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
    . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
இந்தமா நிலம்புரக்கு மங்கயற்கண் ணம்மை
    யின்பமுறுந் தென்பொதிய மலையெங்கண் மலையே.

16.
சிங்கமும்வெங் களிறுமுடன் விளையாடு மொருபாற்
    சினப்புலியு மடப்பிணையுந் திளைத்திடுமங் கொருபால்
வெங்கரடி மரையினொடும் விளையாடு மொருபால்
    விடவரவு மடமயிலும் விருந்தயரு மொருபால்
அங்கணமர் நிலங்கவிக்கும் வெண்கவிகை நிழற்கீ
    ழம்பொன்முடி சூடுமெங்க ளபிடேக வல்லி
செங்கமலப் பதம்பரவுங் கும்பமுனி பயிலுந்
    தென்பொதிய மலைகாண்மற் றெங்கண்மலை யம்மே.

        அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
17.
கச்சைப் பொருது மதர்த்தெழுந்து
    கதிர்த்துப் பணைத்த மணிக்கொங்கைப்
பச்சைப் பசுங்கொம் பங்கயற்கட்
    பாவை பயந்த வாறிருதோட்
செச்சைப் படலை நறுங்குஞ்சிச்
    சிறுவன் றனக்குப் பெருந்தடங்கட்
கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த
    குறவர் குலமெங் குலமம்மே.

            எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
18.
கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்
    கிழங்குகல்லி யெடுப்போம்
    குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்
    கொடியில்வைத்துத் தொடுப்போம்

    16. பிணை - பெண்மான். மரை - ஒருவகை விலங்கு. கும்பமுனி - அகத்தியர்.

    17. செச்சைப்படலை - வெட்சிமாலை. சிறுவன் - முருகக் கடவுள். சிறுமி: இங்கே வள்ளி நாயகி.

    18. விழுந்த - தாழ உண்டான. கல்லி - தோண்டி. தேறல் - தேன். விருந்து - விருந்தினர். பாயல் - படுக்கை. வினை - பாவத்தை.