மதுரை மீனாட்சியம்மை குறம்533

பழம்பிழிந்த கொழுஞ்சாறுந்
   தேறலும்வாய் மடுப்போம்
பசுந்தழையு மரவுரியு
   மிசைந்திடவே யுடுப்போம்
செழுந்தினையு நறுந்தேனும்
   விருந்தருந்தக் கொடுப்போம்
சினவேங்கைப் புலித்தோலின்
   பாயலிற்கண் படுப்போம்
எழுந்துகயற் கணிகாலில்
   விழுந்துவினை கெடுப்போம்
எங்கள்குறக் குடிக்கடுத்த
   வியல்பிதுகா ணம்மே.

19.
புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை யிணங்கும்
   புதுத்தினைகல் லுரற்பாறை முன்றிறொறு முணங்கும்
கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும்
   கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந் திறங்கும்
சில்வலையும் பல்வாரு முன்னிறப்பிற் றூங்கும்
   சிறுதுடியும் பெருமுரசுந் திசைதொறுநின் றேங்கும்
கொல்லையின்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும்
   குறிச்சியெங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே.

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
20.
வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக்
     குறவனெங்கள் வீட்டிற் கொண்ட
வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி
     சீதனமா வழங்கி னாராற்

    19. புல்வாயின் பார்வை - மானாகிய பார்வை மிருகம்; விலங்குகளைப் பிடித்தற்குக் குறவர்களால் உயிரோடு வளர்த்துப் பழக்கப்படும் மிருகம்; இது தீபகமெனவும் வழங்கும். உணங்கும் - காயும். கல்விடர் - மலைக்குகை. கடமான் - யானை. கறங்கி - ஒலித்து. இறப்பு - வீட்டின் தாழ்வாரத்தின் முன்புறக் கம்பத்தின் மேலுள்ள உறுப்பு. ஏங்கும் - முழங்கும். குறிச்சி - குறிஞ்சி நிலத்து ஊர்.

    20. சீதனம் - பெண்களுக்குக் கொடுக்கப்படும் பொருள். பிறகே வந்த கள்ளியென்றது இரண்டாந்தாரத்தை. முன்பெல்லாம் இங்ஙனம் வாழ்ந்தோம்; என் மாற்றாள் வந்தபின் வறுமை யுற்றோமென்று அவள் மேற் குற்றம் சாரும் குறிப்புப் படக் கூறினாள்.