9. திருவெங்கைக்கோவை |
|
தாமக்குழலியைப் பாங்கி தணித்தல் |
|
|
ஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும் நீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை தூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப் போயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே.
|
(402) |
|
தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல் |
|
|
விரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில் அரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற் கரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ் இரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே.
|
(403) |
|
பாங்கி யன்பிலைகொடியையெனத் தலைவனையிகழ்தல் |
|
|
தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வர்க்குச் சிற்றெலும்பு பூம்பா வையாக வருள்வோன்றென் வெங்கைப் பொருப்பிலிளங் காம்பா னதோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம் வேம்பா முனக்குக் கரும்பாயினு மின்று வேலவனே.
|
(404) |
|
ஆயிழைமைந்தனுமாற்றாமையுமேவாயில்களாகவரவெதிர்கோடல் |
|
|
அறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர் பிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னாதுப் பிலகுமொரு நிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல் மறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.
|
(405) |
|
|
|
402.02. ஏதிலர்-அயலார். விடல்-அனுப்பல். இறைஞ்சல்-வணங்கல். தூயேறு-வெள்விடை. புலவி-ஊடல். தீர்தல்-நீங்குதல். 403.03. மறவர்-பகைவர். வயலுக்கு அன்னம் அழகு செய்வதாதலால் அன்ன வயல் என்றார். 404.04. பூம்பாவை-அழகிய பெண். தீம்பால் கமழும் மணிவாய்ப் புதல்வர்-அழகிய திருவாயை உடைய திருஞானசம்பந்தர். காம்பு-மூங்கில். கழைக் கரும்பு-சிறந்த கரும்பு. இப்பாட்டில் திருமயிலையில் திருஞானசம்பந்தர் திருப்பதிக மோதி எலும்பைப் பெண்ணாக்கிய செய்தி கூறப்படுகிறது. 405.05. அறந்தாங்குமையவள்-எண்ணான்கறங்களையும் வளர்ப்பவள். தழும்பு-வடு. உரம்-மார்பு. துப்பு-பவளம். அரவிந்தம்.-செந்தாமரை மலர்.
|
|
|
|