முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தாமக்குழலியைப் பாங்கி தணித்தல்
ஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும்
நீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை
தூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப்
போயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே.
(402)
தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல்
விரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில்
அரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற்
கரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ்
இரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே.
(403)
பாங்கி யன்பிலைகொடியையெனத் தலைவனையிகழ்தல்
தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வர்க்குச் சிற்றெலும்பு
பூம்பா வையாக வருள்வோன்றென் வெங்கைப் பொருப்பிலிளங்
காம்பா னதோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம்
வேம்பா முனக்குக் கரும்பாயினு மின்று வேலவனே.
(404)
ஆயிழைமைந்தனுமாற்றாமையுமேவாயில்களாகவரவெதிர்கோடல்
அறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர்
பிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னாதுப் பிலகுமொரு
நிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல்
மறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.
(405)

402.02. ஏதிலர்-அயலார். விடல்-அனுப்பல். இறைஞ்சல்-வணங்கல். தூயேறு-வெள்விடை. புலவி-ஊடல். தீர்தல்-நீங்குதல். 403.03. மறவர்-பகைவர். வயலுக்கு அன்னம் அழகு செய்வதாதலால் அன்ன வயல் என்றார். 404.04. பூம்பாவை-அழகிய பெண். தீம்பால் கமழும் மணிவாய்ப் புதல்வர்-அழகிய திருவாயை உடைய திருஞானசம்பந்தர். காம்பு-மூங்கில். கழைக் கரும்பு-சிறந்த கரும்பு. இப்பாட்டில் திருமயிலையில் திருஞானசம்பந்தர் திருப்பதிக மோதி எலும்பைப் பெண்ணாக்கிய செய்தி கூறப்படுகிறது. 405.05. அறந்தாங்குமையவள்-எண்ணான்கறங்களையும் வளர்ப்பவள். தழும்பு-வடு. உரம்-மார்பு. துப்பு-பவளம். அரவிந்தம்.-செந்தாமரை மலர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்