9. திருவெங்கைக்கோவை |
|
மணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல் |
|
|
பிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர் பறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால் இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ் சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.
|
(406) |
|
தலைவி தலைவனைப் புகழ்தல் |
|
|
பண்ணுற்ற மென்மொழி யாய்தமிழ் நூலிசைப் பாவலர்தாம் எண்ணுற்ற நம்முயிர்க் காதலர் போல்பவ ரில்லையெனப் பெண்ணுற்ற பங்கர் தம் வெங்கையி லேதண் பெரும்பொழில்வாய்க் கண்ணுற்ற காதலை யின்றள வாகவும் காட்டினரே.
|
(407) |
|
சிலைநுதற்பாங்கி தலைவியைப் புகழ்தல் |
|
|
கேளோர் பரத்தையிற் போகா திருத்தலிற் கீர்த்திபெற்று நாளோ டிலங்கு மருந்ததி யோவொப்பு நாகமணி தோளோ னொருதெய்வ சூளா மணிவெங்கைத் தொன்னகரில் வாளோ வெனுங்கட் பிறைவா ணுதலெங்கண் மாதினுக்கே.
|
(408) |
|
ஓதற்பிரிவு ஓதற்குப்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்ததோழி தலைமகட்குணர்த்தல் |
|
|
விண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண் பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ணணங்கே கண்ணுடை யார்கற் றவரேகல் லார்கண் முகத்திரண்டு புண்ணுடை யாரெனக் கூறிநங் காதலர் போயினரே.
|
(409) |
|
|
|
406.06. வாய்தல்-வாயில். அங்கம்-எலும்பு. அஃது ஆகுபெயராய் அதனாலமைந்த மாலையை உணர்த்திற்று. இம்மை-இவ்வுலகம். தேறல்-தெளிதல். 407.07. எண்உற்ற-மதித்தற்குரிய. பண்ணுற்றமென்மொழியாய் என்றது தோழியை. கண்ணுறல்-காண்டல். 408.08. கேள்-கணவன். பரத்தை-விலைமாது. நாள்-நாள்மீன். எங்கள் மாதினுக்கு அருந்ததியோ ஒப்பு என்று முடிக்க. 409.09. விண்ணுடையார்-தேவர்கள். நூபுரம்-காற்சிலம்பு.
|
|
|
|