முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
சிறப்புப் பாயிரம்
பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத்
தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரனம்
பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனிதன்
நற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே.
 
தோழியாற்றுவித்தல்
நாகூ ரரவணி வெங்கைபு ரேசர்நன் னாட்டிலொரு
பாகூர் மணிநெடுந் தேரன்பர் கேட்டுநின் பாலடைந்தார்
ஆகூழ் பெறுவலி வெஞ்சின வேள்வந் தமர்புரியக்
கூகூ வெனவிள மாவேறி யேகுயில் கூவுவதே.
(423)
தலைமகன் றலைமகளதுஉருவெளிப்பாடுகண்டுள்ளே வியத்தல்
கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில்
சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும்
வார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள்
பார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.
(424)
பாசறைமுற்றி மீண்டூர்வயின்வந்த தலைமகன் பாகற்குப்பரிவொடு மொழிதல்
கார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
போர்கண்ட மன்னவர் நல்வலவாநம் புரவிநெடுந்
தேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந்
நீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.
(425)
தலைமகளோடு கலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டு கனித்தியம்பல்
கயலே யனைய விழியாளும் யானுங் கலந்துபுணர்
செயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுகி
வயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும்
புயலே யினிமதி யொன்றின்முக் காலும் பொழிபொழியே.
(426)

26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.423.23. நாகு-இளமை. ஊர்தல்-தவழ்தல்; செலுத்துதல். பால்-ஏழனுருபு. ஆகூழ்-நல்வினைப்பயன். வேள்-காமன். 424.24. கூர்த்தல்-கூரிதாதல். கயல்-மீன். தொண்டை-கொவ்வை. பயிலல்-பழகல். 425.25. கார்கண்ட-கார்போலும்; கண்ட: உவமஉருபு. கனகம்-பொன். வெற்பு-மலை. வலவன்-தேர்ப்பாகன். இரிதல்-ஓடுதல். செந்நீர்-புதுவெள்ளம். 426.26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்