| 9. திருவெங்கைக்கோவை |
|
| சிறப்புப் பாயிரம் |
| |
| |
பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத் தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரனம் பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனிதன் நற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே. |
|
| |
| தோழியாற்றுவித்தல் |
| |
| |
நாகூ ரரவணி வெங்கைபு ரேசர்நன் னாட்டிலொரு பாகூர் மணிநெடுந் தேரன்பர் கேட்டுநின் பாலடைந்தார் ஆகூழ் பெறுவலி வெஞ்சின வேள்வந் தமர்புரியக் கூகூ வெனவிள மாவேறி யேகுயில் கூவுவதே.
|
(423) |
| |
| தலைமகன் றலைமகளதுஉருவெளிப்பாடுகண்டுள்ளே வியத்தல் |
| |
| |
கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில் சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும் வார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள் பார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.
|
(424) |
| |
| பாசறைமுற்றி மீண்டூர்வயின்வந்த தலைமகன் பாகற்குப்பரிவொடு மொழிதல் |
| |
| |
கார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில் போர்கண்ட மன்னவர் நல்வலவாநம் புரவிநெடுந் தேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந் நீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.
|
(425) |
| |
| தலைமகளோடு கலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டு கனித்தியம்பல் |
| |
| |
கயலே யனைய விழியாளும் யானுங் கலந்துபுணர் செயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுகி வயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும் புயலே யினிமதி யொன்றின்முக் காலும் பொழிபொழியே.
|
(426) |
| |
|
| |
26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.423.23. நாகு-இளமை. ஊர்தல்-தவழ்தல்; செலுத்துதல். பால்-ஏழனுருபு. ஆகூழ்-நல்வினைப்பயன். வேள்-காமன். 424.24. கூர்த்தல்-கூரிதாதல். கயல்-மீன். தொண்டை-கொவ்வை. பயிலல்-பழகல். 425.25. கார்கண்ட-கார்போலும்; கண்ட: உவமஉருபு. கனகம்-பொன். வெற்பு-மலை. வலவன்-தேர்ப்பாகன். இரிதல்-ஓடுதல். செந்நீர்-புதுவெள்ளம். 426.26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.
|
|
|
|